Tuesday, December 23, 2014

‘குத்துவிளக்கை கழுவுனமா, வத்திக்குச்சியை பொருத்துனோமா’

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி ஏழு சென்ட்டி மீட்டர் எட்டி நடக்கறதுக்கே ‘யம்மாடியாகிற’ கதை நம்ம இன்டஸ்ட்ரியில் சர்வ சாதாரணம். ஆறேழு ஹிட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து இன்டஸ்ட்ரியை இனிப்பாக்கிய கே.பாக்யராஜின் வாரிசு, இன்னும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் லெவலை கூட தாண்டவில்லை. என் இனிய தமிழ் மக்களே… என்று ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒரு காலத்தில் வியக்க வைத்த பாரதிராஜாவின் வாரிசு, இன்னும் பாதி ராஜாவை கூட எட்டி பிடிக்கவில்லை தொழிலில். நடிப்பாகட்டும்… இசையாகட்டும்… இயக்கம் ஆகட்டும்… எல்லாவற்றிலும் முட்டை மார்க் வாங்கதான் போட்டி போடுகிறார்கள் இந்த வாரிசுகள்.

‘வைகை காற்றே நில்லு வஞ்சிதனை பார்த்தா சொல்லு’ என்று ஒரு பாடலில் மட்டுமல்ல, ஒரு நுறு பாடல்களில் மெலடியால் குலுக்கிய டி.ராஜேந்தரின் வாரிசான குறளரசன் ஒரு படத்தில் கமிட்டாகி அதில் இன்னும் இரண்டு பாடல்கள் மிச்சமாம். அதையும் போட்டு தருவதற்குள் கோட் பட்டன் வெடிக்கிற அளவுக்கு குமுறுகிறாராம்.

‘இது நம்ம ஆளு’ என்று சிம்பு நயன்தாரா நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் பல வருடங்களாக (!) இயக்கி வரு………….கிறார் அல்லவா? அந்த படத்தில்தான் இந்த கூத்து. படமே முழுசாக முடிந்துவிட்டதாம். குறள் அந்த இரண்டு பாடல்களை போட்டுக் கொடுத்துவிட்டால், ‘குத்துவிளக்கை கழுவுனமா, வத்திக்குச்சியை பொருத்துனோமா’ என்று ஒளியை நிரப்பிவிட்டு நடையை கட்டலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ்.

தம்பி விஷால், அவர் கமல்ஹாசனா கூட இருந்திருக்கலாம்.. !!

நடிகர் விஷால் துபாய் விமான நிலையத்தில் பார்க்க கமல் ஹாஸன் போன்று இருந்த நபரை சந்தித்துள்ளார். விஷால் சுந்தர் சி. இயக்கி வரும் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் வரும் பாடல் காட்சிகளை படமாக்க விஷால், ஹன்சிகா உள்ளிட்டோர் இத்தாலி சென்றனர்.

அப்போது துபாய் விமான நிலையத்தில் விஷால் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லையாம். காரணம் விமான நிலையத்தில் ஒருவர் பார்க்க உலக நாயகன் கமல் ஹாஸன் போன்று இருந்துள்ளார்.

அதிலும் அவரின் கண்கள் அப்படியே கமல் போன்று இருந்துள்ளது. இதை பார்த்த விஷால் அவரை அணுகி அவருடன் ஒரு புகைப்படத்தை எடுத்தார்.

உடனே அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கமல் சார் போன்று இருந்தவரை துபாய் விமான நிலையத்தில் பார்த்தேன் என்று விஷால் ட்வீட் செய்துள்ளார்.

Monday, December 22, 2014

என் அண்ணன் படத்தில நடிக்கிறேன்… உங்களுக்கு ஏன்யா எரியுது…?

நடிகர் ப்ரேம்ஜிக்கு ட்விட்டரில் 4 லட்சத்து 30 ஆயிரம் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் ப்ரேம்ஜி மீது ரொம்பவே கோபத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. ப்ரேம்ஜி ஏதாவது ட்விட்டரில் எழுதினால், அதற்கு கமென்ட் எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி ஏதாவது எழுதி ப்ரேம்ஜியை கடுப்பாக்கிவிடுகிறார்கள்.

 இதனால் டென்ஷனான ப்ரேம்ஜி ‘நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை… மருந்தடிச்சு கொல்லுடா…’ என்றும் கூட ட்விட்டரில் எழுதியிருக்கிறார். இப்போது ஒரு படி மேலே போய் ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் “என்னை வெறுப்பவர்களுக்கு இந்த வீடியோவை அர்ப்பணிக்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார் ப்ரேம்ஜி. டிவி நிகழ்ச்சி ஒன்றில் ப்ரேம்ஜியும் வெங்கட்பிரபுவும் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

அப்போது தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் ப்ரேம்ஜி, “எங்க அண்ணன் படத்துல நான் நடிக்கிறேன்… உனக்கு ஏன் எரியுது…? உனக்கு ஏன்யா எரியுது… வேலையப் பாருய்யா… யோவ்…” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் ப்ரேம்ஜி.

சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா?

தற்போது உள்ள வாழ்க்கை முறையில் அனைவரையும் சர்க்கரை நோய் எளிதாக தாக்கிவிடுகிறது.

சரியான உணவு முறைகளை பின்பற்றினால் சர்க்கரை நோயின் தாக்குதலை தவிர்க்க முடியும். நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமானது.

உணவியல் வல்லுநர்கள் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருத்துவர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில உணவுகளை பரிந்துரைத்துள்ளனர். அவற்றை பற்றி பார்க்கலாம்.

காய்கறிகள்

அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

பழங்கள்

அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது. அதனால் இதை அதிகமாக உண்ணக்கூடாது.

வெந்தயம்

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தக்காளி

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பாதாம்

தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

பால்

பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

இயற்கை இனிப்பு

இனிப்பு சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

 மதுபானம்

நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச் சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அசைவ உணவு

அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டுக் இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

உணவு பழக்கம்

சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக நிற்கும்.

ஜெ.,வை - போதையில் பேசினால்..விஜயகாந்த்தை உள்ள வச்சி மாறுகால் மாறுகை எடுத்துடுவன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியது. அப்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ ராஜா அதிமுகவுக்கு  ஆதரவாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியே கட்அவுட் வைத்தார்.

காவல் துறையில் உள்ள ஒருவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது போலீஸ் அதிகாரிகள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கட்அவுட்டை இரவோடு இரவாக போலீசார் அப்புறப்படுத்தினர்.

ஆனால், கட்அவுட் வைத்த ராஜா மீது  துறை ரீதியிலான எந்த நடவடிக்கையும் இல்லை. இதைத் தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை  தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அதே சிறப்பு எஸ்ஐ ராஜா தனது சீருடையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு  தெரிவித்தார்.

இதுவும் போலீசார் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதும் அவர் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், போலீசார் தற்போது தனக்கு சல்யூட் அடிப்பதாக  கூறி இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து விஜயகாந்த்திற்கு எதிராக வாட்ஸ் அப்பில்
ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: மதுரையில் பேசிய விஜயகாந்த், 3 வருடமாக சல்யூட் அடிக்காத போலீஸ்காரங்க இன்று என்னைப் பார்த்து சல்யூட் அடிக்கிறாங்க என்று பேசி இருக்கிறார்.

அவர் எம்எல்ஏ  என்ற முறையில் சல்யூட் அடித்து இருப்பார்கள். அதையே அவருக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, எங்கள் தமிழகத்தின் தவப்புதல்வி, மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி  அம்மா சிறை சென்றுவிட்டதால் சல்யூட் அடிக்கிறார்கள் என்று கூறியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

இதுமாதிரி பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ளுமாறும், ஜெயலலிதாவை போதையில் பேசினால் அவர் மீது எம்எல்ஏ என்றும் பாராமல் அவதூறு வழக்கு தொடர  வேண்டியது இருக்கும் என்றும் எச்சரிக்கிறேன். இப்படிக்கு சிந்தாதிரிப்பேட்டை சிறப்பு எஸ்ஐ ராஜா என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சிறப்பு எஸ்ஐ ராஜாவின் இந்த வாட்ஸ் அப்  தகவல் தேமுதிகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sunday, December 21, 2014

ஏம்பா… இந்த பொங்கலுக்கு நாங்க எத்தனை படத்தைத்தான் பாக்குறது?

2015 பொங்கல் திருநாளில் ஐ, என்னை அறிந்தால், ஆம்பள ஆகிய படங்கள்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போன்று இந்த மூன்று படங்களும் வெளியாவதும் உறுதி செய்யப்பட்டுவிட்டன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படமும் இந்த பொங்கல் ரேஸில் வந்து ஒட்டிக் கொண்டது.

இப்போது லேட்டஸ்டாக இன்னொரு படமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது

இந்த வரிசையில். கார்த்தி, லஷ்மி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கொம்பன் படம்தான் அது.

இந்த படங்களை வரிசையாக 9 மற்றும் 13 ஆம் தேதிகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதாநாயகிகளைக் கண்முன் நிறுத்தும் இளைஞர்

 ஹாலிவுட் படங்கள் உலக நாடுகளின் உள்ளூர் மொழிகளைப் பேச ஆரம்பித்தபிறகு ஏழுகடல் ஏழுமலை தாண்டியும் ஹாலிவுட் கதாநாயகிகளுக்கு மவுசு கிடைத்து விடுகிறது. தற்போது மில்லியன் டாலர்களில் ஊதியம்பெறும் இந்த ஆங்கிலக் கதாநாயகிகளின் தயவில் உலக அளவில் பிரபலமாகிவிட்டார் பவுலோ பேலஸ்டரோஸ் என்ற 32 வயது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தனியார் தொலைக்காட்சியொன்றில் பணியாற்றும் இவர், பிரபல ஹாலிவுட் கதாநாயகிகளைப் போல மேக்கப் போட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். குறிப்பாக ஹாலிவுட் கதாநாயகிகளின் புகழ்பெற்ற ஹேர் ஸ்டைல் மற்றும் ஒப்பனையை அப்படியே கச்சிதமாகக் கொண்டுவந்து அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மிகப்பெரிய ஹிட்.

இதுவரை ஏஞ்சலினா ஜோலி, கிம் கர்தார்ஷியான், பியான்ஸ், மேகன் பாக்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெனிஃபர் லாரன்ஸ், டைரா பேங்க்ஸ் ஆகியோரின் ஒப்பனையில் இவர் நடித்திய ஒவ்வொரு எபிசோடும் டி.ஆர்.பியில் எகிறிவிட்டது.

விளையாட்டாய் பெண் வேடமிட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதாகவும், பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஹாலிவுட் கதாநாயகிகளின் தோற்றத்தைக் கொண்டுவரும் ஒப்பனை செய்துகொண்டு தொகுத்து வழங்க ஆரம்பித்தபோது வரவேற்பு அள்ள, அதையே அதிக செலவில் நேர்த்தியுடன் செய்ய ஆரம்பித்ததும் பிலிப்பைன்ஸின் முக்கிய பிரபலம் ஆகிவிட்டேன் என்று கூறும் ஃபாலோ, இதே போல நூற்றுக்கணக்கான நடிகைகளின் ஹேர் ஸ்டைலில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி கின்னஸ் சாதனையில் இடம்பெற வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருக்கிறாராம்.

அவரது நீள்வட்ட முகம், அச்சு அசலாக டூப் மேக்-அப் போடுவதற்கு வரமாக அமைந்துவிட்டது. இவரது கதாநாயகிகளின் பட்டியலில் பாலிவுட்டின் கரீனா கபூர், அனுஷ்கா ஷர்மா, ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே ஆகியோருக்கும் இடமிருக்கிறது என்கிறார்.

சொந்த தாய்மாமனை வறுமையில் தவிக்க விட்டவர்! அடுத்த முதல்வராகக் காய் நகர்த்தும்

இயக்குநர் வேலு பிரபாகரன்.. நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், உள்ளிட்ட பல படங்களைத் தந்தவர். தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அடுத்த முதல்வராகக் காய் நகர்த்தும் விஜய், தன் சொந்த தாய்மாமன் வறுமையில் வாடுவதைக் கண்டு கொள்ளாத சிறு மனம் படைத்தவர் என்று கடுமையான மொழியில் விமர்சித்துள்ளார்.


இதுகுறித்து வேலு பிரபாகரன் எழுதியிருப்பதாவது:

"என்னுடன் இருப்பவர் நடிகர் விஜய் அவர்களின் தாய் மாமன்.. தாயார் ஷோபா அவர்களின் அண்ணன...சுரேந்தர். இவரை ஒரு பழைய ஸ்கூட்டி ஓட்டியபடி வடபழனி ஏரியாவில் அடிக்கடி பார்ககலாம் மிக மிக சாதாரண வாழ்க்கை வாழும் அவரது நிலை எங்களை போன்ற சினிமாக்காரர்களுக்கே அதிர்ச்சியும், வேதனையும் தரும். இருவருக்கும் சரியான உறவில்லை என்று நெருங்கியவர்களுக்கு தெரியும், இருந்தாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற நோக்கத்தில் திட்டங்கள் தீட்டி காய்களை நகர்த்தும் ஒருவர்.

அதுவும் பல கோடிகளை ஊதியமாகப் பெரும் ஒருவர், எவ்வளவு மனக்கசப்பு இருந்தாலும் பரந்த மனப்பான்மையோடு தன் மாமன் நிலையை உயர்த்த மனமில்லாதவர்.. பல கோடிகள் புரளும் போதும் தன் இரத்த சொந்தம்... ஏழ்மையில் சிக்கியிருப்பதைக் கண்டும் உதவாத சிறு மனம் படைத்த, மனிதாபிமானமற்ற இதயமில்லாதவர்.. அரசியலுக்கு வந்து மக்களுக்கு என்ன செய்வார்?" -இவ்வாறு அவர் எழுதியுள்ளார். அதன் ஸ்கிரீன்ஷாட்டை இணைத்துள்ளோம். (வேலு பிரபாகரன் விஜய்யை ஒருமையில் எழுதியுள்ளார்)


குறிப்பு: எஸ் என் சுரேந்தர் பிரபலமான பிண்ணனிப் பாடகர். தேவன் கோயில் தீபம் ஒன்று.. போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் பாடியவர். சென்னை 28 படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலிருந்து நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர்தான். ஆரம்ப நாட்களில் விஜய்க்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்


 A

என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும். B உங்கள் பெயர்

B

என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

C

உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.

 D

 உங்கள் பெயர் Dஎன்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.

 E

எழுத்து E பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.

F

உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.

G

G -நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

 H

H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.

I

Iநல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.

J

J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

K

 எழுத்து K ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக்கொள்வீர்கள்.

 L

எழுத்து Lவாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில்/வேலை அமையும்.

N

N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

O

 எழுத்து O அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.

 P

 உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.

Q

Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்.

R

எழுத்து R உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.

 S

 S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.

T

எழுத்து T எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

 U

எழுத்து U அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.

 V

V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.

W

 W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.

 X

எழுத்து X சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள். Y சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து.

Y

என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள்.செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.

 Z

எழுத்து Z இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.

எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

  எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

அன்னாசி (முழுசாக) 1 வாரம்

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்


காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,

ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் ஒரு வாரம்

தக்காளி 1-2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்

காளான் 1-2 நாட்கள்


அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்

Saturday, December 20, 2014

ஜெயலலிதா படத்தை மடியில் வைத்திருந்த பன்னீர்செல்வம் - குஷ்பு

 
 டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

ஒரு காங்கிரஸ் நடிகையாக, விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்:
நான் 1987-ல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காக அரசியலில் இறங்கினேன். நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.

நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை, காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். விடுதலைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஆனார். ஆனால், இப்போது நிலைமை என்ன, முதலில் முதல்வர் ஆகிறார்கள். பிறகு சேல்ஸ்மேனாகி விடுகின்றனர்.

பா ஜ க மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலையை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்கிறார். இன்னும் நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் ரம்மி விளையாடாததுதான் பாக்கி.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மீட்டிங் நடந்தது. தமிழகத்தில் இருந்து சென்றவர் மீட்டிங்கில் அவரது கட்சித் தலைவர் போட்டோவை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு இருந்தாராம். இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன உண்மை சம்பவம்

வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

திருமண சடங்கில் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மணமகனின் அண்ணி, உற்சாக மிகுதியில் மணமகனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். அத்துடன், அவரை இழுத்து நடனமும் ஆடியுள்ளார். இதைப் பார்த்த பெண் வீட்டார் கொதிப்படைந்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர்.

இதனால் திருமண வீடு சண்டை வீடாக மாறியது. திருமணத்திற்கு வந்த அனைவரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது. திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அத்துடன் விடாத பெண் வீட்டார், மாப்பிள்ளையை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் வந்து அவரை மீட்டனர்.

உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் இந்த  திருமணம் நின்றுபோன சம்பவம் நடந்திருக்கிறது.
ஒரு முத்தத்தால் திருமணம் நின்று போனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பகுதியில் திருமண நேரத்தில் மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுப்பது, அவர்களுடன் நடனம் ஆடுவது என்பது வழக்கமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.

முத்தங்கள் பலவகை …..மொத்தமும் அறிந்தவர் யார்??

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?




ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

சர்க்கரை நோய் தீர எளிய சித்த மருத்துவம்!

சர்க்கரை நோய் பரம்பரை நோயாக வருவது மட்டுமின்றி அதிக அளவு கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்டு அதற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் அசைவ உணவுகளையும் இனிப்பு உணவுகளையும் அதிகமாக உண்பவர்களுக்கும் மஞ்சள் காமாலை நோய் கண்டவர்களுக்கும் எளிதாக வரும்.

இப்படிப்பட்டவர்களின் உடலில் உள்ள கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்தி விடும். உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரை குளுகோசாக மாறி உடலின் பல பாகங்களுக்கும் சென்று உடலுக்கு சக்தியை கொடுக்கிறது, இன்சுலின் சுரத்தல் நின்று விட்டால் மேல் கண்ட சக்தி நமது உடலுக்கு கிடைக்காமல் பல நோய்களுக்கு நாம் ஆளாகின்றோம். அதனால் தான் நோய் கண்டவர்கள் மருத்துவமனைக்கு போன உடன் முதலில் குளுக்கோஸ் ஏற்றுவார்கள்.
siddhaஉடல் சக்தி இழப்புக்கு காரணங்கள் மித மிஞ்சிய உடல் உறவு, உடல் சூடேறி தாது கெட்டு நரம்பெல்லாம் பலன் குறைந்துவிடும் அளவுக்கு மிதமிஞ்சிய தேகப் பயிற்சி, மலம், மூத்திரத்தை அடக்குவது, தேவையற்ற பட்டினி, கண்விழிப்பு, விபத்தில் இரத்தம் அதிகமாக வெளியேறுதல், அடிக்கடி இனிப்பான உணவுகளை உண்பதாலும் சக்தியற்ற உணவுகளை சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

நீரழிவு நோயின் அறிகுறிகள் :

உடல் மெலியும். வியர்வை அதிகப்படும். உடலும் கண்களும் வெளுத்து காணப்படும். நெஞ்சு உலரும். நா வரளும். தாகம் மிகும். ஆயாசம், களைப்பு உண்டாகும். உணவு செல்லாது. சிறுநீரகங்கள் பாதிக்கும். இருதயம் பலவீனப்படும். ஆண்மை சக்தி குறையும். நரம்புகள் சக்தியை இழக்கும். சிறுநீர் அடிக்கடி வெளியேறும். உடலில் எந்த பாகத்தில் காயம் பட்டாலும் இலகுவில் புண் ஆறாது.

தீராத நோய் சித்த மருத்துவத்தில் குணமாகும். இன்றைய மருத்துவர்கள் இயற்கையாக இன்சுலின் சுரக்க வழி வகுக்காமல் செயற்கை இன்சுலினை ஏற்றியும் அதிக அளவு மாத்திரைகளைக் கொடுத்தும் சார்க்கரை நோய் தீராமல் மேலும் உடலில் பல நோய்கள் உண்டாக காரணமாக வழி செய்கிறது.

இயற்கை இன்சுலின் உடலில் சுரந்து நோய் தீர சித்த மருத்துவத்தில் ஆவாரை பஞ்சாங்கம், நாவல் பட்டை, நாவல் கொட்டை, வெந்தையம், வல்லாரை, பொற்சீந்தில், ஆலம் விழுது, சிறு குறிஞ்சான், மருதம் பட்டை, அரக்கீரை, வள்ளக்கீரை, அத்தி கொழுந்து இவைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்து இடித்து சலித்து சூரணமாக்கி காலை மாலை உணவுக்கு முன்பு வேளைக்கு அரை முதல் ஒரு டீஸ்பூன் வரை வென்னீர் அல்லது பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் இயற்கையாக கணையம் இயங்கி அதன் வாயிலாக இயற்கை இன்சுலின் சுரந்து சர்க்கரை நோய் தீரும்.

கொடுமைகளை இழைத்த கூடாரத்திற்கே ஓடும் கங்கை அமரன் …..

இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் தம்பி என்ற ஒற்றை தகுதியை வைத்துக்கொண்டு திரையுலகில் தன்னை பொருளாதார அளவில் தன்னை செழுமையாக்கி கொண்டவர் கங்கை அமரன் ….

பிறப்பால் ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்தவர் பல பல தீண்டாமை கொடுமைகளை அனுபவித்த குடும்பம் இவரது குடும்பம்.

இவரது மூத்த அண்ணண் பாவலர் வரதாரஜன் அவர்கள் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக பொதுவுடமை கட்சிகளில் களமாடியவர் அக்கட்சிகளின் மேடைகளில் கச்சேரி நடக்கும்போது கங்கைஅமரனும் பங்கேற்று தீண்டாமை மற்றும் ஆதிக்க சாதிகளுக்கு எதிரான பாடல்களை பாடுவதுண்டு …..

பிறகு சினிமாவிற்கு வந்து அண்ணண் இளையராஜாவின் தயவால் அவரின் நிழலியே வளர்ந்து இயக்குனராக இசையமைப்பாளராக உயர்ந்தார் பொருளாதாரத்திலும் செழுமையடைந்தார் …

ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்து பல கொடுமைகளை அனுபவித்த இவர் உயர்ந்த பிறகு அந்த கொடுமைகளில் இன்னும் சிக்க தவிக்கும் மக்களுக்காக இதுவரை ஒன்றுமே செய்ததில்லை …

இந்த நிலையில் …நேற்று இவர் தன்னை பாஜகவில் ஐக்கியப்படுத்திக்கொண்டார் …

எந்த இந்துத்வ கொள்கைகள் இவரை ஒடுக்கியதோ ஊர் ஊராக ஓட வைத்ததோ தீண்டாமை கொடுமைகளை அனுபவிக்க வைத்ததோ அந்த இந்துத்வத்திற்கு தாளமிட சென்ற கங்கை அமரன் அவர்களே …

பொருளாதாரம் செழுமை பெற்றதும் தீண்டாமையால் ஏற்பட்ட வடுக்களை மறந்த உங்களின் மன போக்கு எத்தகையது ?

இன்னும் சாதிய கொடுமைகளால் அவதியுறும் மக்களின் பணம் தான் உங்களின் தற்போதைய செழுமைக்கு காரணம் என்பதை மறந்தது ஏன் ?

சேர்ந்த இடத்திலும் அங்கே இருப்பவர்கள் உங்களை ஒடுக்கபட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற கண்ணோட்டதோடுதான் பார்ப்பார்கள் என்பதை காலம் செல்ல செல்ல நீங்கள் உணருவீர்கள் ….

கங்கை அமரனின் இந்த அரசியல் பாதை பிணங்கள் மிதக்கும் கங்கையைவிட அசுத்தமானது என்பதை உரத்து சொல்வேன்.

‘நேற்று வரை நீ யாரோ… இன்று முதல் நீ வேறோ’

‘நேற்று வரை நீ யாரோ… இன்று முதல் நீ வேறோ’ ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, அவ்வளவும் ஐ படத்தின் அறிவிப்பு செய்த மாயம். வரும்…ஆனா வராது ரேஞ்சிலேயே அப்படத்தை டீல் பண்ணி வந்த தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு முறையும் ஐ வருவதாக பேச்சிருக்கும் போதெல்லாம் அசராமல் தங்கள் படத்தையும் வெளியிட நாள் குறிப்பார்கள். நினைத்த மாதிரியே ஐ வராது. அவரவர் படங்களும் நிம்மதியாக ரிலீஸ் ஆகும்.

இந்த முறையும் ஐ பற்றி அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் இங்கே. பொங்கலுக்கு என்னை அறிந்தால், ஆம்பள, இவற்றுடன் கார்த்தி நடித்த கொம்பனும் வரும் என்று விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. ஆனால் எல்லாருடைய திட்டத்திலும் நாட்டு வெடிகுண்டை வீசியிருக்கிறது ஐ அறிவிப்பு. ‘பொங்கல் வெளியீடு’ என்று திட்ட வட்ட அறிவிப்புடன் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. படத்தை சென்சார் செய்யும் வேலைகளிலும் கன ஜோராக இறங்கிவிட்டார்கள்.

ஐ வந்தாலும் அஜீத் படம் வரும் என்கிறார்கள் இங்கே. ஏனென்றால் கடந்த பல்லாண்டுகளாகவே அஜீத்திற்கும் விக்ரமுக்கும் ஒரு அண்டர் ‘வார்’ சைலண்ட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அஜீத் பின்வாங்கினால் அதை ரசிகர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கொம்பன் எப்படி?

‘பொங்கல் என்னுடைய ராசி தினம்’ என்கிறாராம் கார்த்தி. ‘பருத்தி வீரன் பொங்கலுக்குதான் வந்துச்சு. சிறுத்தை பொங்கலுக்குதான் வந்துச்சு. ரெண்டு படத்தோட வெற்றியை பற்றி நான் சொல்லவே தேவையில்ல. அப்படியிருக்கும் போது இந்த பொங்கலை விட்டுட முடியுமா?’ என்கிறாராம் அவர். நடுவில் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டையும் காலை எடுத்து முன் வைக்கும் திட்டத்திலிருப்பதால் கோடம்பாக்கமே கலகல…

யாரை யார் வெல்லுவாரோ?

Friday, December 19, 2014

மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு சல்மான் கான்...?

 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இருந்து பல பாடங்களை கற்றே தாம் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டமை இங்கு விசேட அம்சமாகும்.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார். ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் இதனை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ, அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தல் சட்டங்களை மீறி வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பிரசாரங்களுக்காக இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்து வரப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை கலைஞர்கள் தற்போது இல்லை. அரசாங்கம் சல்மான்கானை இலங்கைக்கு அழைத்து வரவுள்ளது. சல்மான்கானை அழைத்து வந்து நாமல் பேபின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த உள்ளனர்.

மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை பேஸ்புக்கில் பார்த்தேன். தற்போது இலங்கை கலைஞர்களால் அரசாங்கத்திற்கு பயனில்லை. இதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்களை வரவழைக்க உள்ளனர் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

கேபியின் உடல் நிலையும்..... மீடியாக்களின் ‘கொலை’ப் பசியும்!

கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்திலும் மீடியாக்கள் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பு ஏற்படுத்திய செய்தி தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் உடல் நிலை பற்றியதுதான்.

இது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அதைவிட பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது இந்த விஷயத்தில் சில மீடியாக்களின் அநாரீகமான அணுகுமுறை. இரண்டு நாட்களுக்கு முன் கே.பி அவர்கள் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆழ்வர்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் சில விஷமிகள் மூலம் வாட்ஸ் அப்பில் கே.பி இறந்து விட்டதாகவே ( மன்னிக்கவும்) பரபரப்பப்பட்டது. உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் தங்கள் ஊழியர்களை மருத்துவமனையில் குவித்தன.

தொலைக்காட்சி மீடியாக்களும் கேமாராக்களுடன் மருத்துவமனை முன்பு அணிவகுத்தன. திரையுலக பிரபலங்கள் ஓவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பத்திரிகையாளர் ஒவ்வொருவரிடமும் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர்.

அனைவரும் கே.பி. சார் நலமாக உள்ளார் என்ற தகவலை சொன்னார்கள்.ஆனால் மீடியாக்காரர்கள் யாரும் அவர்கள் சொல்லுவதை நம்பத் தயாராக இல்லை. அதனால் அவர்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இதல் சிலர் கோபமாகி அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்றனர். ரஜினி வந்த போதும் ‘சார் நல்லா இருக்காங்க சீக்கிரம் குணம்டைஞ்சு வருவாங்க' என்று சொன்ன போதும் மீடியாக்களின் முகத்தில்! என்ன இது.. இன்னும் நாம் எதிர்பார்த்த நியூஸ் வரவில்லையே என்பது போல் பெரிய ஏமாற்றம் தெரிந்தது.

சிறிது நேரத்தில் குஷ்பூ அங்கு வந்தார். பதட்டத்துடன் உள்ளே சென்றவர் கே.பியை பார்த்த்போது, ‘கமாண்டிங் பவரோடு எத்தனை படைப்புகளை கொடுத்த சாதனை மனிதர் இப்படி இருக்கிறாரே' என்று ஆதங்கப்பட்டு வரும்போது அழுத கண்களை துடைத்தபடியே வந்தார்.

அவ்வளவுதான் மொத்த பத்திரிகையாளர்களும், "ஆமா... சார் போட்டுறலாம் சார்.. குஷ்பூ கதறி அழறாங்க சார்" , என்றும் இன்னும் சிலர் "மைலாப்பூர் வீட்லேயே வெச்சிருவாங்கா சார். நாளைக்குதான் மற்ற விஷயம். " என்றும், "பெசண்ட் நகர் இல்லன்னா கிருஷ்ணாம்பேட்டை.. இன்னும் தெரியலை சார்" என்றும் நம் காதுபடவே சிலர் செல்போனில் சொல்லிக்கொண்டிருந்ததையும் கேட்க முடிந்தது.

இதையெல்லாம் பார்க்கும்போது கவலையாகவும், வெட்கமாகவும் கூட இருந்தது. ஒரு செய்தியை முதலில் வெளியிடுவது என்பது மீடியாக்களின் தொழில் சம்மந்தபட்ட விஷயம் என்றாலும், எந்த மாதிரியான செய்தியை முதலில் சொல்ல வேண்டுமென்கிற அடிப்படை தர்மம் வேண்டாமா.

எண்பத்தி நான்கு வயதில் ஒரு மனிதர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டால் அது மரணத்திற்காக மட்டுதான் இருக்க முடியுமா? ஒரு வயதானவருக்கு இயல்பாக என்ன பிரச்சனைகள் வருமோ அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்காக இருக்கக்கூடாதா? இதில் கொடுமை என்னவென்றால் குஷ்பூ வெளியில் வந்து "சார் நல்லா இருக்காக்ங்க" என்றதும் சிலர் "என்ன மேடம் சொல்றீங்க நல்லா இருக்காரா?" என்று முகத்தில் அதிர்ச்சியை காட்டி அவசர அவசரமாக அவரது அலுவலகத்திற்கு போன் பண்ணி கே.பியை பற்றி தான் சொன்ன தகவலைத் திருத்துகிறார்.

மரணத்தைக்கூட முதலில் நாம்தான் சொல்ல வேண்டும் என்கிற இந்த அநாகரீக அரிப்பு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதற்கு சில சம்பவங்கள். காமெடி மன்னன் கவுண்டமணி சில வருடங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் வெளியானதும் இந்தியா முழுவதும் வெளிவரும் ஒரு முன்னனி ஆங்கில நாளிதழ் நடத்தும் இணைய தளம், பிரபல வார இதழ் நடத்தும் இணையதளத்திலும் கொட்டை எழுத்தில் கவுண்டமணி மரணம் என்று செய்தியைப் போடு விட்டு மார்தட்டிக்கொண்டது. ஆனால் சிகிச்சை முடிந்து கவுண்டமணி நலமாக வீட்டுக்கு திரும்பி விட்டார்.

அன்று தற்செயலாக இதைக் கேள்விபட்டு கவுண்டமணி தன்னுடைய நக்கல் நடைலில் அந்த நபர்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். இதே போல் இன்னொரு பத்திரிகையில் தயாரிப்பாளர் நடிகர் பாலாஜி அவர்கள் இறந்து விட்டதாக செய்தி வந்து விட்டது. மறுநாள் அந்த அலுவலகத்திற்கு ஒரு போன் வந்திருக்கிறது.

போனை எடுத்த ஊழியார் "ஹலோ யார் பேசறது" என்க, மறுமுனையில் "நான் தான் செத்துப்போன பாலாஜி பேசுறேன்" என்று சொல்லவும் அந்த ஊழியர் ஆடிப்போய் விட்டார். சமீபத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மறைந்து விட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது.

அன்று மாலை நடந்த சினிமா விழாவில் எம்.எஸ்.பாஸ்கரே கலந்து கொண்டு "நான் இறந்த பாஸ்கர் பேசுகிறேன்" என்று வேதனையுடன் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். இப்படி மீடியாவின் 'கொலை‘ப்பசிக்கு பலியானவர்களில் கலைஞர், மனோரமா, என்று ஒரு பட்டியலே இருக்கிறது. இனிமேலும் இந்த பட்டியல் நீளக் கூடாது என்பதுதான் நமது கவலை.

அதனால் பத்திரிகைகள் இதுபோன்ற தகவல்களை தாமதமாகக் கொடுத்தாலும் தவறில்லை என்ற மன நிலைக்கு வரவேண்டும். கே.பி பற்றி எதிர்மறைத் தகவலை முதலில் சொல்வது மட்டும் மீடியாக்களின் கடமை அல்ல. அவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பும், யாரும் சொல்லத் துணியாத கருத்துக்களை தைரியமாக திரையில் சொன்ன அவரது துணிவும், அவரது ஆளுமையும், புரட்டிப்போட்ட புரட்சிகரமான கருத்துகளையும் இந்த தலைமுறையினருக்கு தெரியும் வகையில் சொல்ல வேண்டியதும் மீடியாக்களின் கடமைதானே.

அவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நாளிலிருந்து இன்று வரைக்கும் ஒவ்வொரு நாளும் அதை எழுத ஆரம்பித்திருந்தாலே அதைப் படித்த அல்லது படித்தவர்கள் வாய்வழி பரவும் அந்த பாஸிடிவ் வைப்ரேஷனிலேயே பாலசந்தர் எழுந்து நடந்து வந்திருப்பார்.

ஆனால் மீடியாக்களுக்கு தேவை கே.பாலசந்தரின் உயிரற்ற உடல் தானே தவிர தமிழ் சினிமாவிற்கு உயிர் கொடுத்த துணிச்சலான அவரது கருத்துகள் அல்ல என்றல்லவா ஆகிவிட்டது!

நடந்ததை மறந்துவிடுங்கள்: தமிழர்களிடம் கெஞ்சும் ராஜபட்ச

இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரை மறந்து, நாட்டு முன்னேற்றத்துக்காக ஒன்றுபட வேண்டும் என இலங்கைத் தமிழர்களுக்கு அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் அவர், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முல்லைத்தீவு நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:

ஈரான், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுள்ளது.

அதைப் போன்ற நிலை நமது நாட்டுக்கு ஏற்படக்கூடாது.

நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

நடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டு, நாட்டு வளர்ச்சிக்காக தமிழர்கள் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும் என்றார் அவர்.

போரின் துயரங்களிலிருந்து அந்தப் பகுதி மக்கள் இன்னும் மீளாத நிலையில், தனது உரையில் விடுதலைப்புலிகளுடனான போர் குறித்து பேசுவதை அவர் தவிர்த்தார்.

பாக். சிறைக்குள்ளேயே "குடும்பம் நடத்தி" தந்தையான தீவிரவாதி 'லக்வி'- திடுக் தகவல்

மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான ஷகி உர் ரஹ்மான் லக்வி சிறையில் இருந்தாலும் சிறப்பு சலுகைகளுடன் சொகுசாக வாழ்ந்து அங்கே "குடும்பம் நடத்தி" "குழந்தைக்கு தந்தையான"தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பாவின் ஹபீஸ் சயீத். இச்சதியை செயல்படுத்தியது ஷகி உர் ரஹ்மான் லக்வி.

 இந்தியாவின் நீண்ட வலியுறுத்தலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற 'மும்பை தாக்குதல் வழக்கில்' லக்வி சேர்க்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறான்.

அப்போது லக்வி, ஒரு குழந்தைக்கு தந்தை என்ற தகவல் ஏதும் இல்லை. பின்னர் 2010 ஆம் ஆண்டு சிறையில் இருந்தபடியே அபு ஜிண்டால் உள்ளிட்ட சக தீவிரவாதிகளைத் தொடர்பு கொண்டு தனக்கு குழந்தை பிறந்த செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கிறான் அவன். 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய அபு ஜிண்டாலை இந்தியா கைது செய்தது.

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு இந்தியர்களை கொல்ல உத்தரவுகள் பிறப்பித்ததும் அபு ஜிண்டால்தான்.. அவனுக்கு இந்தி கற்றுக் கொடுத்ததும் ஜிண்டால்தான்.. அபு ஜிண்டாலிடம் தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்திய போது லக்வியுடனான தொடர்புகளை விவரித்துள்ளான்.. "2010ஆம் ஆண்டு சிறையில் இருந்து அவன் எனக்கு போனில் பேசினான்.

அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.. தான் ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாகவும் கூறினான். தனது இளம் மனைவி சிறையில் தன்னுடன் தங்கி இருக்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றான். நானும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறியிருந்தான் ஜிண்டால். இதை இந்திய அரசும் உறுதிப்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அரசிடம் கேள்வி எழுப்பியது.

ஆனால் இதுநாள் வரை பாகிஸ்தானிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. இத்தனைக்கும் சிறையில் ஆர்டரலி வசதி, தொலைக்காட்சி மற்றும் தொலைத் தொடர்பு வசதிகளுடன் லக்வி சுதந்திரமாக இருப்பதற்கான ஆதாரங்களையும் இந்தியா கொடுத்தும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் லக்விதான் முக்கியம்.

 லஷ்கர் தொ தொய்பா இயக்கத்தின் மூத்த தளபதி என்பதால் சிறப்பு சலுகைகளை அவனுக்கு அந்நாட்டு அரசு அளித்தது. இப்படி லக்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாகிஸ்தான் தற்போது, மும்பை தாக்குதல் வழக்கில் அவனுக்கு எதிராக போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி ஜாமீன் வழங்கியிருப்பது ஆச்சரியப்படுத்தவதற்கில்லைதான்..

 நமது நாட்டின் உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களின்படி லக்வி முழுமையாக சிறைவாசத்தை அனுபவித்தது இல்லையாம்; வெளியில் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறது.. அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டிருந்ததாம்.

மும்பை தாக்குதல் வழக்கில் அவனுக்கான தொடர்புகள் குறித்து இந்தியா ஏராளமான ஆதாரங்கள் வழங்கியிருந்தும் பாகிஸ்தான் அவனுக்கு இத்தனை சுதந்திரம் கொடுத்திருக்கிறது. மும்பை தாக்குதல் வழக்கில் லக்விக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா கூட கூறியது..ஆனாலும் பாகிஸ்தானிடம் இருந்து எந்த பதிலும்தான் இல்லை.. அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது.. அவன் மீது யாரும் தாக்குதல் நடத்தி விடக் கூடாது என்று பாதுகாக்கவே சிறையில் அடைப்பது போல் பாகிஸ்தான் நாடகமாடியிருக்கிறது என்பதுதான் உளவுத்துறையினரின் கருத்து.

Thursday, December 18, 2014

விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!




வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை.

 ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.இந்த தகவல்களை எல்லாம் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம்
(http://www.visamapper.com/ ) இணையதளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமால் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவல்களை இந்த தளம் தருகிறது. அதுவும் எப்படி, அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைப்படத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது. இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இண்ட வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளீர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞசள் வண்ணம் என்றால் அன்லைனில் விண்ணபிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிறகான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான்.

அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே ,பயனாளி எந்த நாட்டின் குடிமகன் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது ,இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ’நான் இந்த நாட்டு குடிமகன்’ என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன என்ற தகவலையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று இது ஒரு வழிகாட்டி தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகார்பூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போலவே விசாமேப்.நெட்
(http://www.visamap.net/) எனும் இணையதளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்கள் உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும்.

Tuesday, December 16, 2014

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முதல்வர்? - அரசுத் தேர்வில் ஜெயலலிதா குறித்த கேள்வி

இந்தியாவில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்தவர் யார் என்று ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை சார்பில் காலியாக இருந்த ஜூனியர் என்ஜினியர் பதவிக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  மொத்தம் 21 மண்டலங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

சென்னை மண்டலத்தில் நடந்த தேர்வின் வினாத்தாளில் முன்னாள் முதல்வரு அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குறித்துக் கேள்விக் கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்வியில்,

முதன் முதலில் இந்தியாவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்தவர் யார்?
(அ). லாலு பிரசாத் யாதவ், (ஆ). ஜெகன்னாத் மிஸ்ரா, (இ). ஜெ. ஜெயலலிதா, (ஈ). எடியூரப்பா.

இந்த கேள்வி குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன், ரயில்வே துறை தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளது.


இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த கேள்வியை உடனடியாக நீக்க வேண்டும் என்றார். மேலும் இந்த விவகாரம் குறித்து பேச அனுமதி அளிக்குமாறு அதிமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக பதிலளித்த அருண் ஜெட்லி, ’இவ்விஷயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்’ என உறுதியளித்தார்.

ஜெயலலிதா முதல்முறையாக முதல்வர் பதவி வகித்த 1991-1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகால சிறை தண்டனையையும், 100 கோடி அபராதத் தொகையையும் தண்டனையாக விதித்தது குறிப்பிடத்தக்கது.

கிரானைட் குவாரியில் சமாதியாக்குவோம்: சகாயத்திற்கு மிரட்டல்

கிரானைட் முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை செய்தால், குவாரியில் போட்டு சமாதி ஆக்கி விடுவோம் என சட்ட ஆணையர் சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.16000 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

முதல்கட்டமாக கடந்த மூன்றாம் தேதிமுதல் 6ஆம் தேதிவரை மனுக்களை பெற்ற சகாயம், 2-வது கட்ட விசாரணையை தொடங்குவதற்காக விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார்.

அவர் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் முகாம் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர். சகாயம் வந்தவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் அவரிடம் மனு அளித்தனர்.

இதில், நேரடியாக 53 மனுக்களும், அஞ்சல் மூலமாக 31 மனுக்களும் பெறப்பட்டது. இதில், அஞ்சல் மூலம் வந்த கடிதம் ஒன்றை பிரித்து பார்த்தபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டிருந்தது.

குவாரியில் சமாதியாக்குவோம்

ஊஞ்சனை காளியம்மன் துணை என ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ''உயர்திரு. சட்டப்பணி ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு, குமார் எழுதும் கடிதம். கிரானைட் குவாரி என்னுடைய உறவினர்களும் மற்றும் எனக்கு வேண்டப்பட்டவர்களும் கனிம வள குவாரி நடத்துகிறார்கள். அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தக்கூடாது. எந்தவித இடையூறும் கொடுக்கக்கூடாது.

உடனே மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உயிருடன் திரும்ப முடியாது. அதையும் மீறி தொந்தரவு கொடுத்தால், இங்குள்ள குவாரியில் போட்டு சமாதி ஆக்கிவிடுவோம். சகாயம் உடம்பிலுள்ள கறி கூறுபோட்டு விற்கப்படும்.

என் மனைவி பிரேமா ராணி நெடுஞ்சாலைத் துறையில் ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்கிறார். இவருக்கு பதவி உயர்வும், சேலத்திற்கு பணியிட மாற்றமும் செய்ய நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அவர் உதவி செயற்பொறியாளராக உள்ளார். இவருக்கு பணி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நீங்கள் மதுரையில் தங்கி விசாரணை நடத்தக்கூடாது. விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.இதனால், தமிழக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

கிரானைட் அதிபர்களால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயாள், சாந்தி, மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் சகாயத்தை சந்தித்து மனு அளித்தனர். மதுரையை அடுத்த புது தாமரைப்பட்டி ஜாங்கிட் நகரில் எங்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா ஒரு கிரவுண்ட் வீட்டு மனை வழங்கப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, எங்களது இடத்தில் கிரானைட் கற்கள் கொட்டப்பட்டு இருந்தன.

மிரட்டிய அதிபர்கள்

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிரானைட் அதிபர்களிடம் கேட்டபோது, அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் நிலத்தை எங்களிடம் விற்று சென்று விட்டார்கள். அதேபோல் நீங்களும் எங்களிடம் நிலத்தை விற்றுவிடுங்கள் என்று கூறி ரூ.55 ஆயிரத்தை கொடுத்து மிரட்டி நிலத்தை வாங்கி கொண்டனர். எனவே அந்த நிலத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தலை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் கொடுத்த புகார் மனுவில், "எனது கணவர் கருப்பசாமி பி.ஆர்.பி. நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள், உங்கள் கணவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினர். இதையடுத்து நானும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். ஆனால் சில நாட்களிலேயே அவர் இறந்து விட்டார். 

இதுகுறித்து குவாரி அதிபரிடம் கேட்டபோது, ரூ.10 லட்சம் நஷ்டஈடு தருவதாக கூறினார். ஆனால் இதுவரை நஷ்டஈடு வழங்க வில்லை. எனது கணவர் சாவில் மர்மம் உள்ளது. மேலும் எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதால் ரூ.10 லட்சம் நஷ்டஈட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இதேபோல் குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் புகார் மனு அளித்தனர். சட்ட ஆணையர் சகாயம் இன்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார்.

எம்.எல்.ஏ மேல் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சுவீட் கடை உரிமையாளர்

பீகார் மாநிலம் பீளகஞ்ச்சட்டசபை தொகுதி  ராஷ்டிரிய ஜனதா தல எம்.எல்.ஏ  சுரேந்திர பிரசாத் யாதவ். இவர்கடந்த ஞாயிற்று கிழமை கயாவிற்கு சென்று விட்டு பீளகஞ்ச் திரும்பி கொண்டு இருந்தார்.  வரும் வழியில் கயா திகிரி ரோட்டில் உள்ள ஸ்ரீராம் தில் குத் பந்தர் என்ற சுவீட் கையில் நிறுத்தி உள்ளார். அங்கு சுவீட் வாங்க சென்று உள்ளார். அப்போது சுவீட் கொடுக்க நேரமாகி உள்ளது இதில் சுவீட் கடை உரிமையாளர் திரேந்திர குமாருக்கும் எம்.எல் ஏவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

 இதில் கோபம் அடைந்த சுவீட் கடை உரிமையாளர் திரேந்திர குமார் கொதிக்கும் எண்ணெய்யை எம்.எல்.ஏ மற்றும்  அவரது உதவியாளர் மீது ஊற்றினார் இதில் எம்.எல் ஏயின்  காது மற்றும் கழுத்துபகுதியில் காயம் ஏற்பட்டது உடனடியாக இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இது குறித்து எம்.எல்.ஏ சுரேந்திர பிரசாத் போலீசில் புகார் செய்து உள்ளார். சுவீட் கடை உரிமையாளரும். எம்.எல்.ஏ குறித்து போலீசில் புகார் செய்து உள்ளார்.

Monday, December 15, 2014

ஜெயலலிதா வழக்கில் பவானிசிங்: தள்ளுபடி செய்யப்பட்ட மனு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முதலில் அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் ஆச்சாரியா. பிறகு பவானிசிங் அந்த பதவிக்கு வந்தார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27ம் திகதி தீர்ப்பளித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார்.

வாதத்தின் இறுதியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பவானிசிங் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இருப்பினும் உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் வழக்கறிஞர் மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக செயல்படுவதற்கு மட்டுமே பவானிசிங்கிற்கு அனுமதியுண்டு.
அவர் உயர் நீதிமன்றத்திலும் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்கு அனுமதி கிடையாது. எனவே வேறு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை மேற்கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் விஜய் ஒரு தேவாங்கு

 ஒரு நிமிஷம் இதை நங்கள் சொல்லவில்லை எங்களை திட்டவேண்டாம், இதை கூறியது குறிப்பிட்ட வார இதழ். ஆம் ஆனால் இது இப்போது கூறியதும் இல்லை, அதாவது நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில் தன் முதல் படத்திற்காக பெற்ற முதல் பத்திரிகை விமர்சனம் இதுதான்.

விவரமாகவே சொல்கிறோம், நடிகர் விஜயின் முதல் படமான “ நாளைய தீர்ப்பு “ வெளிவந்த சமயத்தில் அதற்கு குறிப்பிட்ட வார இதழ் வெளியிட்ட விமர்சனத்தில் “ இந்த நடிகர் பார்ப்பதற்கு தேவாங்கு போல் இருக்கிறார், தன் மகன் என்ற காரணத்தால்தான் இயக்குனர் S.A.C அவர்கள் நடிக்க வைத்துள்ளார் “ என்ற ரீதியில் அந்த விமர்சனம் அமைந்தது. ஆனால் அதே குறிப்பிட்ட வார இதழ் சில மதங்களுக்கு முன் நடிகர் விஜய்க்கு “ Next Super Star “ அதாவது “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டதை கொடுக்க அதிக முனைப்புடன் செயல்பட்டு வந்ததது நமக்கேத் தெரியும்.

இதனால் தமிழ் திரையுலகில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவியதும் நமக்குத் தெரியும். எதன் காரணமாக திடிரென்று நடிகர் விஜய்க்கு “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டம் தர இவ்வாறு முனைப்பு காட்டியது என்று விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டோம். அந்த குறிப்பிட்ட வார இதழின் விற்ப்பனை அதள பாதாளத்திற்குள் சென்றுவிட்டது அதை மீட்டு அதிக விற்ப்பனை செய்ய யோசனையில் இருந்தபோதுதான் இந்த “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ திட்டத்தை கையில் எடுத்தது.

இதை ஆரம்பிக்கும்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். அந்த குறிப்பிட்ட வார இதழ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள் அதற்கு “ சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது ரஜினிகாந்தின் சொத்தோ அல்லது ‘ அடுத்த சூப்பர்ஸ்டார் ‘ பட்டம் குறித்த வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை “ என்று காட்டமாகவே பதில் வந்திருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அந்த குறிபிட்ட வார இதழுக்கு எதிராக ஆதரவு திரட்டினார்கள் அதில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் அடக்கம். இதனால் அப்போது அந்த திட்டத்தை கைவிட்டது.

இருந்தும் மறுபடியும் இந்த திட்டத்தை செயல்படுத்தி அவர்களாகவே நடிகர் விஜய்தான் “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ அறிவித்தது. ஆனால் இதில் உண்மையாக வெற்றி பெற்றது அஜித்தான், அவர்தான் அதிக வாக்குகள் பெற்றார் என்று என்ற செய்தியும் வந்தது. ஆனால் நடிகர் விஜய் இந்த வாக்கெடுப்புக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றுத்தெரியவில்லை மாறாக தன்னை “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ தேர்ந்தெடுத்த குறிபிட்ட வார இதழுக்கு நன்றி என்று அறிக்கையில் கூறியிருந்தார்.

அங்கேதான் இந்த பிரச்சினை சூடு பிடித்தது, அந்த வார இதழ் நிர்வாகம் உடனே சுதாரித்துக்கொண்டு காரியத்தில் இறங்கி மதுரையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விழா எடுத்து “ அடுத்த சூப்பர்ஸ்டார் “ பட்டம் வழங்க முயற்சி செய்ததது. இந்த முயற்சியில் மண் விழுந்த கதையாக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிகழ்வோடு இந்த பிரச்சினை அடங்கியிருக்கிறது ஆனாலும் உள்ளுக்குள் இன்னும் புகைந்துகொண்டுதான் இருக்கிறது.

இதில் ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்


ஒரு பேருந்து, ஒரு விமானத்திற்கு சமமில்லை அதேபோல் ஒரு விமானம், ஒரு பேருந்துக்கு சமமில்லை, ஆகாயத்தில் செல்ல விமானம்தான் பயன்படும் சாலையில் செல்லல பேருந்துதான் பயன்படும் ஆனால் இரண்டும் ஒன்றுகொன்று சளைத்ததும் அல்ல.

இன்னும் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் M.G.R-ருக்கு ரஜினி சமமில்லை, ரஜினிக்கு விஜய் சமமில்லை, விஜய்க்கு சூர்யா சமமில்லை, சூர்யாவுக்கு தனுஷ் சமமில்லை மேலும் தனுஷ்க்கு சூர்யா சமமில்லை, சூர்யாவுக்கு விஜய் சமமில்லை, விஜய்க்கு ரஜினி சமமில்லை, ரஜினிக்கு M.G.R-ம் சமமில்லை.

இங்கே திறமை இல்லாதோர் யாருமில்லை. ஆதலால் ரசிகர்கள் இந்த சச்சரவுகளுக்கு இடம் தராமல் மூன்றாவது நபர் சுய லாபம் தேடிக்கொள்ள உதவி புரியாமல் நல்ல சினிமாக்களை ஆதரிக்க வேண்டும் தங்கள் விருப்ப நடிகர்கள் படங்களையும் ஆதரிக்க வேண்டும்.

‘எல்லா படத்திலயும் சொத்தை எழுதி கொடுக்கிற மாதிரியே நடிச்சு சொத்து சேர்த்திடுவாரு நம்ம தலைவரு’

‘எல்லா படத்திலயும் சொத்தை எழுதி கொடுக்கிற மாதிரியே நடிச்சு சொத்து சேர்த்திடுவாரு நம்ம தலைவரு’ இது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கலக்கும் ரஜினியைப் பற்றிய கமென்ட்.

லிங்கா படத்தைப் பற்றி ஓவர் பில்டப் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே இந்த படம் உலா வருகிறது. லிங்கா வெளியான மூன்று நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். அதே சமயம் லிங்காவின் தெலுங்கு உரிமை சுமாராக 30 கோடிகளுக்கு விலைபோனது. இது எந்திரனைவிட அதிகம். லிங்கா வெளியான முதல்நாள் ஆந்திரா முழுவதும் சேர்த்து 4 கோடியையே படம் வசூலித்துள்ளது.

படம் சரியில்லை என்ற விமர்சனம் காரணமாக இரண்டாவது நாளிலிருந்தே கூட்டம் குறையத் தொடங்கியது. வார நாட்களில் வசூல் இன்னும் மோசமடையும் என்பதால் அசலையாவது படம் எடுக்குமா என்ற நிலைக்கு படத்தை வாங்கியவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மற்ற தமிழ் நடிகர்களின் படங்களைவிட மிக அதிகம்தான் லிங்கா வசூலித்துள்ளது.

ஆனாலும் அதற்கு தரப்பட்டது மிகமிக அதிக விலை என்பதால் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 12ஆம் தேதி தமிழ்நாட்டில் 720 தியேட்டர்களில் லிங்கா வெளியானது. நள்ளிரவு 1 மணிமுதல் திரையிடப்பட்டது படம். 8 காட்சிகள் கூட திரையிடப்பட்டதாம். டிக்கெட் 300 ரூபாய் 400 ரூபாய்க்கு கூட விற்பனை செய்யப்பட்டதாம்.

இதன் காரணமாகவே மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூல் என்கின்றனர் உண்மை அறிந்தவர்கள். ஆனால் அரசுக்கு இந்த தொகை சரியாக கணக்கு காட்டப்படுமா என்றும் கேட்கின்றனர்.

விமர்சிக்க கூடாதா?

மனிதராக பிறந்தவர்கள், அதுவும் பொதுவாழ்க்கையில் நுழைந்தவர்கள் அனைவருமே விமர்சனத்திற்கு உரியவர்கள்தான். 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பணம் கொடுத்து படம் பார்த்த சினிமா ரசிகர்கள் ரஜினியின் லிங்காவை விமர்சித்து  கொண்டுதான் இருக்கின்றனர்.

சொத்து எழுதி வச்சிடுவாரு

ஊருக்காக தனது சொத்துக்களை எழுதி வைப்பதை முத்து காலத்தில் இருந்தே செய்து கொண்டிருக்கும் ரஜினி இன்னமும் ஒருவாய் சாப்பாடு கூட ரசிகர்களுக்காக போட்டதில்லை என்பதே உண்மை அதுவே விமர்சனத்திற்கு ஆளாகிறது.

சம்பாதிக்கும் ரஜினி

படத்திற்கு படம் சொத்தை எழுதி வைத்துவிடுவதாக காண்பித்தாலும், கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது என்னவோ ரஜினிதான் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

அரசியல் பேச்சு ஏன்?

அதேபோல ரஜினியைத் தவிர அவரைச்சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் அவரை அரசியலுக்கு அழைக்கின்றனர். ஆனால் அவரோ தனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்கிற ரீதியிலேயே பேசுவதால் ரஜினி ரசிகர்களே சோர்வடைகின்றனர் என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள்.

காப்பியடித்த காட்சிகள்

இதைவிட இந்த படத்தில் எந்தெந்த காட்சிகள் காப்பியடிக்கப்பட்டன. சிவந்த மண் படத்தில் இருந்துதான் லிங்காவின் கிளைமாக்ஸ் காப்பியடிக்கப்பட்டது என்றும் உலாவருகின்றன.

யாருமே தப்பமுடியாது

பேஸ்புக்ல அடிக்கணும்னு ஆரம்பிச்சா லிங்குசாமியாவது லிங்காவாவது எல்லாருமே ஒண்ணுதான் நம்ம ரசிகர்களுக்கு என்ன நான் சொல்றது?

பள்ளிகளுக்கு கிருஸ்துமஸ் விடுமுறை ரத்தாகிறதா! நடப்பது என்ன..?

கிருஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று பள்ளிகளுக்கு வழக்கம் போல விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய மனித

 டிசம்பர் 25-ஆம் தேதியன்று முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என நவோதயா பள்ளிகளுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

 இதற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கிருஸ்துவசமுதாய மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் இதனை மறுத்துள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, அன்றைய தினம் நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் இதனையொட்டி திட்டமிடப்பட்டுள்ள கட்டுரைப்போட்டி, இணையதளம் வழியாகவே நடத்தப்படும் என்றும் பங்கேற்கும் மாணவர்கள் கட்டுரை போட்டியில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் கிருஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் ஆதரமற்ற செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஏற்கனவே செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினத்தை குரு உத்சவ் தினமாக கொண்டாட சுற்றறிக்கை அனுப்பியதற்கும், 6ஆம் வகுப்பு மாணவர்கள் சமஸ்கிருதம் அவசியம் கற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதற்கும் கண்டன குரல்கள் எழுந்தன.

தற்போது கிருஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று விடுமுறை இல்லை என்று கூறப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Sunday, December 14, 2014

அப்ப சொர்ணமால்யா இப்ப ரம்யா…! மணிரத்னம் முடிவு

‘யாரோ யாரோடி உன்னோட புருஷன்…. யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்’ என்று சின்னத்திரை சொர்ணமால்யாவை வியந்து திரைக்கு கூட்டி வந்தவர் மணிரத்னம். ‘அலைபாயுதே’ படத்தின் சொர்ணமால்யாவின் அழகை அதே சொர்ணமால்யா நினைத்தாலும் இப்போது திரும்ப பெற முடியாது. அதற்கப்புறம் பல படங்களில் நடித்து ஃபேட் அவுட்டாகி தற்போது தனக்கு முதன் முதலில் அடையாளம் கொடுத்த சின்னத்திரைக்கே வந்துவிட்டார் சொர்ணா. நெக்ஸ்ட்?

முன்பெல்லாம் முக்கியமான விழாக்கள் என்றால் அது தொகுப்பாளினி ரம்யா இல்லாமல் நடக்காது. தழைய தழைய புடவை கட்டி, தலை நிறைய மல்லிகை பூவுடன் அவர் மைக்கை பிடித்தால், நிகழ்ச்சிக்கு குத்துவிளக்கே தேவையில்லை. அவரே ஒரு மங்களகரமான மூடுடன் நிகழ்ச்சியை துவங்கி வைப்பார். பேச வரும் விவிஐபிகளும் தொகுப்பாளிதானே என்கிற அலட்சியம் காட்டாமல் ரம்யாவுக்கும் சேர்த்து சில வார்த்தைகள் பேசிவிட்டு இறங்குவார்கள். கொஞ்ச நாட்களாக எல்லாமே மிஸ்சிங். ஏன்? ஏன்? ஏன்?

அவர் சினிமாவில் நடிக்கப் போய்விட்டார். சொர்ணமால்யாவை தொடர்ந்து மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகையை தேடி வந்த மணிரத்னம் தனது புதிய படத்தில் ரம்யாவை நடிக்க வைத்திருக்கிறாராம். அவர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எவராக இருந்தாலும் பல்க் ஆக தேதியை கொடுத்திருக்க வேண்டும். அவர் எப்போது கேமிரா முன் நிற்க அழைக்கிறாரோ, அதற்கு தயாராக இருக்க வேண்டும். அந்த கடமைக்காக தன் வெகு கால கடமையான தொகுப்பாளினி வேலையை கொஞ்ச நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார் ரம்யா.

மேடை வெளிச்சத்துல ஒட்டடை படியுது… உடனே வாங்க ரம்யா!

அமைச்சர்களை விளாசி தள்ளிய ஜெயலலிதா

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், மீண்டும் ஜெயலலிதா, கட்சி மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பது கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா, ஜாமீனில் வெளி வந்த பிறகும் யாரையும் சந்திக்கவில்லை. அவரை சந்திக்க முயற்சித்தவர்களுக்கு, அனுமதி கிடைக்கவில்லை. அவரது முடிவு தெரியாததால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், திட்டங்களை செயல்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். அரசு செயல்பாடுகள் முடங்கின, எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கின, கட்சியினரும் சோர்வடைந்தனர்.

தற்போது, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பிக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது, அவரது பார்வை ஆட்சி மற்றும் கட்சி மீது விழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், முதல்வர் பன்னீர்செல்வம், அவரது செயலர்கள், அரசு ஆலோசகர்கள், பொலிஸ் அதிகாரிகள், பல்வேறு அமைச்சர்கள் ஆகியோரை போயஸ் கார்டனுக்கு அழைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களிடம், அரசு திட்டங்களின் செயல்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
அதன்பின் அமைச்சர்களுடன், உட்கட்சி தேர்தல் குறித்து விவாதித்துள்ளார். அப்போது, பெண் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள் சண்முகநாதன், ஆனந்தன், ஆகியோரை கண்டித்துள்ளார்.
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பிரச்னைக்கு, சுமுக தீர்வு காணாததற்கு, அமைச்சர் தங்கமணியிடம் கடுமை காட்டியிருக்கிறார். அதேபோல் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, ஆகியோர் செயல்பாடுகளும் விமர்சிக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஒரு சாட் அசிங்கமாக நீண்டால்

ஃபேஸ்புக்கில் யாரோ என்றோ யாருடனோ செய்த chatஐ ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பரப்புகிறார்களாம்.. ஆதரவாகவும் எதிராகவும் பல பதிவுகள்.. 2000-2004 கால கட்டம்.. தமிழகத்தில் பரவலாக எல்லாம் ஊர்களிலும் ப்ரௌசிங் செண்டர் வர ஆரம்பித்தன.. இப்போது இங்கு பெரிய நொன்னைகளாக இருப்பவர்கள் எல்லாம் அந்தக் காலத்தில் முதன்முதலாக இண்டர்நெட்டில் எதைத் தேடினோம்? எதற்காக ப்ரௌசிங் செண்டர் எல்லாம் போனோம்?

இங்கும் ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்த காலகட்டத்தில் ஒவ்வொருவரும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.. இது ஒரு common ஆன விஷயம் தான்.. ஆரம்ப காலத்தில் ஒரு வித கிக்கிற்காக, மனக்கிளர்ச்சியில் இதையெல்லாம் செய்வார்கள்.. போகப்போக maturity வந்து விடும்..

வீட்டில் பதின்ம வயதில் இது மாதிரி காரியம் செய்து மாட்டிக்கொள்ளும் நம் பிள்ளைகளைப் பக்குவமாகப் பேசி, அவர்களுக்குப் புரியவைப்போமா, அல்லது சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரனிடம் எல்லாம் “என் பிள்ளையோட லட்சணத்தைப் பாரு”னு தம்பட்டம் அடிப்போமா? அந்தப் பக்குவத்தை ஏன் நம்மால் பிறரிடம் காட்ட முடியவில்லை? நம் வீட்டுப்பிள்ளை என்றால் நமது மானமும் அதில் சேர்ந்து கப்பல் ஏறிவிடும் என்கிற பயம்.. ஆனால் அதுவே இன்னொருவன் என்றால், அவன் மானம் கெடுவதைப் பற்றி நாம் யோசிப்பதேயில்லை..

இரண்டு வரிகளுக்கு மேல் ஒரு சாட் அசிங்கமாக நீண்டால் அதில் தவறு ஒருவர் பக்கம் மட்டும் கண்டிப்பாக இருக்காது.. அதே மாதிரி ஃபேஸ்புக், இண்டர்நெட்டில் எல்லாம் ஒருவர் ஆரம்ப காலத்தில் இது போல் செய்வதும் சகஜம் தான்.. முடிந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் இருங்கள், அல்லது அவருக்கு தனிப்பட்ட முறையில் பக்குவமாக அறிவுரை கூறுங்கள்.. தேவையில்லாமல் ஊர் முழுக்க தம்பட்ட அடிப்பது எதற்கும் பிரயோஜனப்படாது..

தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!

டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்திருந்த இ போஸ்ட் மூலம் மட்டுமே பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன.

ரஜினியின் பிறந்த நாளை உலகமே நேற்று கொண்டாடியது. நாட்டின் பிரதமர் தொடங்கி, சாமானிய ரசிகன் வரை அவரை அனைவருமே வாழ்த்தி மகிழ்ந்தனர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்தினர்.

தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற இ போஸ்ட் முறையை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியது. நேற்று சென்னை அபிராமபுரம், கோபாலபுரம் தபால் நிலையங்களில் இபோஸ்ட் மூலம் பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் ரஜினிக்குக் குவிந்தன. இதனை அஞ்சல் துறை ஊழியர்கள் ரஜினி வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

இதுகுறித்து சென்னை மண்டல தபால் துறை அலுவலர் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில், " பொது மக்களைக் கவர அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில்

ஒன்று இ போஸ்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற விரும்புவோருக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தினோம். பெரிய வெற்றி பெற்றுள்ளது," என்றார்.

ரஜினி பேச்சை காப்பியடித்து பேசினார் காங்கிரஸ் “தியாகி” குஷ்பூ!

 ‘பாபா’ பட தோல்விக்குப் பின்னர் நடந்த ‘சந்திரமுகி’ பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை. நான் யான அல்ல; குதிரை. கீழே விழுந்தாலும் சட்டென எந்திரிச்சிடுவேன். எனவே மீண்டும் வீரத்தோடு வருகிறேன்” என்றார்.
ரஜினியின் இந்த பேச்சை காப்பியடித்து, கொஞ்சம் உல்டா செய்து, காங்கிரஸ் மேடையில் முழங்கி இருக்கிறார் “சுதந்திரப் போராட்ட வீராங்கனை” நடிகை குஷ்பு.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகரில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு பங்கேற்றார். திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இது என்பதால் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டனர் காங்கிரஸ் நிர்வாகிகள். அதுபோல் காங்கிரஸ் கூட்டம் என்றாலே அவ்வளவாக ஆர்வம் காட்டாத பொதுமக்களும், குஷ்பு பங்கேற்றதால் எப்போதும் இல்லாத வகையில் கும்பலாக பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் தலைவர் தங்கபாலு, வர்த்தகப் பிரிவு தலைவர் வசந்தகுமார், முன்னாள் எம்.பி.க்கள் ஆருண், மாணிக் தாகூர்ஆகியோர் கலந்துகொண்டனர்.
வழக்கமான உற்சாகத்துடன் குஷ்பு மைக்கை பிடிக்கவும் கூட்டத்தில் கிளம்பிய விசில் சத்தத்தையும், கைத்தட்டல் சத்தத்தையும் கேட்டு, மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கே நடப்பது நம் கட்சி கூட்டம்தானா? என்ற சந்தேகம் வந்ததைப் போன்று, திகைப்புடன் பார்த்தனர். ஆனால் அதில் மகிழ்ச்சி ரேகை தென்பட்டது. தனது வழக்கமான உற்சாகத்துடன் பேச்சை தொடங்கிய குஷ்பு கூறியதாவது:-
வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாட்டு மருமகளாகி தமிழ் கத்துக்கிட்டு தப்பு இல்லாமல் ஓரளவு தமிழ் பேசுறேன்னு சொன்னால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் மறைந்த தலைவர் காமராஜரும், பாரதியாரும் சந்தோஷப்படுவார்கள். கர்மவீரர் காமராஜர் பிறந்து வளர்ந்த ஊரில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன்.

எல்லோரும் ஏன் கட்சி மாறீனீர்கள்? என்று கேட்கின்றனர். நம்முடைய நல்ல கொள்கைகளை மாற்றிக் கொள்வது நல்லதா?அல்லது நம்முடைய நல்ல கொள்கைகளுக்கு இடம் தராத கட்சியில் இருப்பது நல்லதா?நான் அந்த கட்சியில் இருந்து மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.

நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்துவிட்டுத் தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப் போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை.
காங்கிரஸ் கட்சியில் ஏன் சேர்ந்தீர்கள்? என்று கேட்கிறார்கள். நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி காங்கிரஸ் கட்சி. நமக்கு பேச்சுரிமை, கருத்துரிமையைப் பெற்று தந்தது காங்கிரஸ் கட்சி. நான் இன்றைக்கு சுதந்திரமாக எனது கருத்தை தைரியமாகப் பேசுவதற்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்.

இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ் கட்சிதான். இதில் இருந்துதான் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் எல்லாம் வந்தது. ஏன்… தமிழகத்தில்கூட திமுக, அதிமுக, மதிமுக கட்சிகள் எல்லாம் திராவிடர் கழகத்தில் இருந்து வந்தவைதான். தி.க. எதில் இருந்து வந்தது?  நீதிகட்சியில் இருந்து வந்தது. அந்த நீதிக்கட்சி காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தது. எனவே  எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஆணிவேர் காங்கிரஸ் கட்சிதான். இதை யாராவது மறுக்க முடியுமா? அப்படி மறுத்தால் இப்பவே என் பெயரை மாற்றிக் கொண்டு இந்த மேடையை விட்டு போய் விடுகிறேன்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று விட்டது. பா.ஜ.க. மக்களிடம் பொய்யான பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலின்போது என்ன சொன்னார்கள்?காஷ்மீர் பிரச்னையை தீர்ப்போம், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவோம், கறுப்பு பணத்தை மீட்போம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரைககும் எதையாவது செய்திருக்கிறார்களா? மோடி மஸ்தான் வேலை காட்டி ஆட்சியை பிடித்த நரேந்திர மோடி, மக்களை பற்றி சிந்திககாமல் ஆஸ்திரேலியா, பிரேசில், பூடான் என்று உலக நாடுகளில் சுற்றுலா சென்று வருகிறார்.

இந்தியாவில் தூங்கிக கொண்டிருககிற மககளை எழுப்பி சரியான பாதையில் கொண்டு செல்லும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தோற்றாலும் மீண்டு வரும். யானை கீழே விழுந்தால் எழுந்திரிக்க நேரம் அதிகமாகும். ஆனால் பந்தயக் குதிரை. கீழே விழுந்தால் மறுநிமிடமே துள்ளி எழுந்துவிடும். காங்கிரஸ் கட்சி பந்தயக் குதிரை. அது சீக்கிரம் எழுந்து நாட்டைக் காக்கும். தமிழகத்தில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைக்க எல்லோரும் பாடுபடுவோம். கண்டிப்பாக நமது லட்சியம் நிறைவேறும்” என்றார் குஷ்பு.

Saturday, December 13, 2014

ஜெயலலிதாவை மீண்டும் சிறையில் அடைப்பேன்: சபதமிடும் தலைவர்

போஸ்டர்களின் மூலம் ஆர்ப்பாட்டம் நடத்தி ஜெலலிதாவை மீண்டும் சிறையில் அடைக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியவதாவது, தமிழக அரசு பெயரளவுக்கு சட்டமன்றத்தை நடத்துகிறது. நாடாளுமன்றத்துக்கு மோடி வருவதில்லை, அப்படியே வந்தாலும் எந்த பிரச்னைக்கும் பதில் சொல்வதில்லை.

இதற்கிடையே மக்களின் முதல்வர் என கூறிக்கொண்டு, வீட்டில் முடங்கி கிடக்கும் ஜெயலலிதா பன்னீர் செல்வத்தின் மூலம் ஆட்சி நடத்துகிறார்.

அவரது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க கோரி, போயஸ் கார்டன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் இவ்விடயத்தில் பொலிசார் எங்களை தடுக்க முயன்றால் அவர்களையும் மீறி நாங்கள் செயல்பட தயார் எனவும் பேட்டியளித்துள்ளார்.

ஒருபக்கம் நீயாநானா இன்னொருபக்கம் ஆபாச நடனம்! -இதுதான் விஜய்டிவி ஸ்பெஷல்!

சமூகத்தை அது சீரழிக்கிறது, இது சீரழிக்கிறது என்றெல்லாம் சொம்பைத் தூக்கிட்டு கிளம்புற கலாச்சார காவலர்களை நினைச்சால் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. இவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது. ஆனால் ஓசையின்றி வீட்டுக்குள்ளேயே மிகப்பெரும் கலாச்சார சீரழிவுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் டிவிக்களை எப்படி இவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. வீட்டுக்கு வந்தா டிவி பார்ப்பது ஒன்றுதான் அவர்களுடைய பொழுது போக்காக இருக்கும் போது இதையெல்லாம் சிந்திக்க அவர்களால் முடியவில்லையோ என்னவோ!

கடந்த சனிக்கிழமை எதேச்சையாக டிவி சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்த போது ஒரு சேனலில் அம்பிகாவும் ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். ஏதோ தங்கள் சினிமா அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டே அந்த சேனலைப் பார்த்தால், அவர்கள் அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்காக வந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும்தான் ஜட்ஜாம். அந்த நிகழ்ச்சியின் பெயர் ஜோடி சீசன்ஸ் 6 என்பதாம்.
jodi
வந்ததே வந்திட்டோம், என்னதான் நடக்குதுன்னுப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று பார்த்தால் ரெக்கார்டு டேன்ஸ் என்று சொல்வார்களே அதை அங்கே நிகழ்த்திக் கொண்டு இருந்தார்கள். நகரங்களில் மட்டுமே ஒருகட்டத்தில் இருந்து கொண்டிருந்த கவர்ச்சி காட்டும் ரெக்கார்டு டேன்ஸ் அந்த சேனலில் நடந்து கொண்டிருந்தது. ஐஸ்வர்யா என்னும் பெண் அரைகுறை ஆடையில் ஆடிக் கொண்டிருந்தார். அவரது உடையில் அப்படி ஒரு கவர்ச்சி. ஆடி முடிந்ததும், அம்பிகா அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி வந்தார்.

‘ம்… அடுத்த வாரம் நீங்க ஜோடியை மாற்றி ஆடணும்… யார் கூட ஆட ஆசைப்படுறீங்க’ என்று தொகுப்பாளினி கேட்கிறார். அதற்கு ஆடிய பெண்ணோ, ‘எனக்கு அவர் கூட ஆடணும்…’ என்று வேறு ஒருவர் பெயரைச் சொல்கிறார். தொகுப்பாளினி தன் கையில் ஒரு குடுவையை வைத்துக் கொண்டு அதில் குலுக்கல் முறையில் ஒரு பெயரை தேர்ந்தெடுக்கிறார். அதில் வேறு ஒரு பெயர் வந்திருக்க, ‘அவர் பெயர் சீட்டுல வரலை… எனவே நீங்க அவர் கூட ஆடப்படாது… இவர் கூடத்தான் ஆடணும்…’ என்று சீட்டில் பெயர் வந்தவரை சுட்டிக் காட்ட, சரி என தலையை ஆட்டிக் கொண்டு போகிறார் நடனம் ஆடிய பெண்.

அடக் கடவுளே இந்த டிவிப் பெட்டியில இப்படி ஒரு பெரிய கூத்தே நடக்கிறது நமக்கு இத்தனை நாட்களும் தெரியமப் போச்சே!

மலசல கூடத்தில் மஹிந்த..! ஓட்டம் எடுத்த பெண்…

 மலசலகூடத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் இருந்ததால் உள்ளே சென்ற பெண்ணொருவர் அச்சத்தில் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. சுஜீவ சேனசிங்க நாடாளுமன்றில் கிண்டலடித்தார்.
பாதையோரத்தில் நாய் ஒன்றுகூட படுத்துறங்க முடியவில்லை. அவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவின் பதாகைகளை அரச தரப்பினர் ஒட்டிவிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவு பற்றிப் பேசி அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற அரசு நடவடிக்கை எடுக்கின்றது.

இலங்கையில் தனிநபர் ஒருவரின் வருமானம் 35,000 ரூபா என்று மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண அரச ஊழியர் ஒருவருக்கு இந்தச் சம்பளம் கிடைப்பதில்லை. புகையிரத நிலைய ஊழியர் ஒருவருக்கு 21,000 ரூபா சம்பளம் கிடைக்கிறது. அதில் 19,000 ரூபா மட்டுமே அவருக்கு சம்பளமாகக் கிடைக்கும்.

அதில் மின்சாரக் கட்டணம் 2,000 ரூபா, தண்ணீர் கட்டணம் 1,000 ரூபா, போக்குவரத்துச் செலவு 6,000 ரூபா என 9,000 ரூபா செலவாகின்றது. எஞ்சியிருக்கும் 10,000 ரூபாவில்தான் உணவு, பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட ஏனைய செலவுகளைப் பார்க்கவேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் நூற்றுக்கு 50 வீதமான மக்கள் ஒருவேளை உணவு உண்ணமுடியாத நிலை ஏற்பட்டு வருகின்றது.

மலசலகூடத்துக்குள் சென்ற பெண்ணொருவர் பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். ஏன் எனக் கேட்டால் உள்ளே ஒருவர் இருக்கின்றார் என்றார். யார் இருக்கின்றார் என்று உள்ளே சென்று பார்த்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்-அவுட் உள்ளே இருந்தது.
உள்ளே எவரும் இல்லை. அது ஜனாதிபதியின் கட்-அவுட்டே உள்ளது என்று அந்தப் பெண்ணிடம் கூறினோம்” எனத் தெரிவித்தார்.

புதிய வசதி அறிமுகம் : இன்டர்நெட் இல்லாமல் யு டியூப் வீடியோ பார்க்கலாம்


கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளித்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் இணைய தள பயன்பாடு அதிகம் இருக்கிறது. எனவே யு டியூப் அப் மூலம் வீடியோக்களை ஆன்லைன் பார்க்கும்போது அது 48 மணி நேரத்துக் சேமித்து வைக்கப்படும்.

ஒருமுறை இவ்வாறு பார்த்தபிறகு 48 மணி நேரத்துக்குள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோவை பார்க்கலாம். மொபைல் அப் மூலம் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. இதே வசதி பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியாவில் தற்போது உள்ளது. அதையடுத்து இந்தியாவிலும் இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ‘‘இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது.

இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் இதன்பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்’’ என்றார். இதற்கென சரிகமா டிசீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் யு டியூப் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதுபோல் இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் யு டியூபுக்கு இந்தியா 5வது பெரிய சந்தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Blog Archive