Saturday, December 20, 2014

ஜெயலலிதா படத்தை மடியில் வைத்திருந்த பன்னீர்செல்வம் - குஷ்பு

 
 டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

ஒரு காங்கிரஸ் நடிகையாக, விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பு இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்:
நான் 1987-ல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காக அரசியலில் இறங்கினேன். நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை.

நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன். சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை, காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். விடுதலைக்குப் பிறகு தமிழக முதல்வர் ஆனார். ஆனால், இப்போது நிலைமை என்ன, முதலில் முதல்வர் ஆகிறார்கள். பிறகு சேல்ஸ்மேனாகி விடுகின்றனர்.

பா ஜ க மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலையை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்கிறார். இன்னும் நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் ரம்மி விளையாடாததுதான் பாக்கி.
சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்கள் மீட்டிங் நடந்தது. தமிழகத்தில் இருந்து சென்றவர் மீட்டிங்கில் அவரது கட்சித் தலைவர் போட்டோவை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு இருந்தாராம். இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

ஒரு முத்தத்தால் திருமணமே நின்றுபோன உண்மை சம்பவம்

வாலிபர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். பின்னர், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதுதொடர்பாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

திருமண சடங்கில் மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மணமகனின் அண்ணி, உற்சாக மிகுதியில் மணமகனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார். அத்துடன், அவரை இழுத்து நடனமும் ஆடியுள்ளார். இதைப் பார்த்த பெண் வீட்டார் கொதிப்படைந்து மணமகன் வீட்டாரிடம் தகராறு செய்ய ஆரம்பித்தனர்.

இதனால் திருமண வீடு சண்டை வீடாக மாறியது. திருமணத்திற்கு வந்த அனைவரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், பெண் வீட்டார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமணம் நின்று போனது. திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டிற்கு சென்றனர். அத்துடன் விடாத பெண் வீட்டார், மாப்பிள்ளையை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் வந்து அவரை மீட்டனர்.

உத்தரபிரசேதத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் இந்த  திருமணம் நின்றுபோன சம்பவம் நடந்திருக்கிறது.
ஒரு முத்தத்தால் திருமணம் நின்று போனது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த பகுதியில் திருமண நேரத்தில் மாப்பிள்ளைக்கு அண்ணி முத்தம் கொடுப்பது, அவர்களுடன் நடனம் ஆடுவது என்பது வழக்கமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.

முத்தங்கள் பலவகை …..மொத்தமும் அறிந்தவர் யார்??

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?




ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

சர்க்கரை நோய் தீர எளிய சித்த மருத்துவம்!

சர்க்கரை நோய் பரம்பரை நோயாக வருவது மட்டுமின்றி அதிக அளவு கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்டு அதற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் அசைவ உணவுகளையும் இனிப்பு உணவுகளையும் அதிகமாக உண்பவர்களுக்கும் மஞ்சள் காமாலை நோய் கண்டவர்களுக்கும் எளிதாக வரும்.

இப்படிப்பட்டவர்களின் உடலில் உள்ள கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்தி விடும். உணவிலிருந்து கிடைக்கும் சர்க்கரை குளுகோசாக மாறி உடலின் பல பாகங்களுக்கும் சென்று உடலுக்கு சக்தியை கொடுக்கிறது, இன்சுலின் சுரத்தல் நின்று விட்டால் மேல் கண்ட சக்தி நமது உடலுக்கு கிடைக்காமல் பல நோய்களுக்கு நாம் ஆளாகின்றோம். அதனால் தான் நோய் கண்டவர்கள் மருத்துவமனைக்கு போன உடன் முதலில் குளுக்கோஸ் ஏற்றுவார்கள்.
siddhaஉடல் சக்தி இழப்புக்கு காரணங்கள் மித மிஞ்சிய உடல் உறவு, உடல் சூடேறி தாது கெட்டு நரம்பெல்லாம் பலன் குறைந்துவிடும் அளவுக்கு மிதமிஞ்சிய தேகப் பயிற்சி, மலம், மூத்திரத்தை அடக்குவது, தேவையற்ற பட்டினி, கண்விழிப்பு, விபத்தில் இரத்தம் அதிகமாக வெளியேறுதல், அடிக்கடி இனிப்பான உணவுகளை உண்பதாலும் சக்தியற்ற உணவுகளை சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

நீரழிவு நோயின் அறிகுறிகள் :

உடல் மெலியும். வியர்வை அதிகப்படும். உடலும் கண்களும் வெளுத்து காணப்படும். நெஞ்சு உலரும். நா வரளும். தாகம் மிகும். ஆயாசம், களைப்பு உண்டாகும். உணவு செல்லாது. சிறுநீரகங்கள் பாதிக்கும். இருதயம் பலவீனப்படும். ஆண்மை சக்தி குறையும். நரம்புகள் சக்தியை இழக்கும். சிறுநீர் அடிக்கடி வெளியேறும். உடலில் எந்த பாகத்தில் காயம் பட்டாலும் இலகுவில் புண் ஆறாது.

தீராத நோய் சித்த மருத்துவத்தில் குணமாகும். இன்றைய மருத்துவர்கள் இயற்கையாக இன்சுலின் சுரக்க வழி வகுக்காமல் செயற்கை இன்சுலினை ஏற்றியும் அதிக அளவு மாத்திரைகளைக் கொடுத்தும் சார்க்கரை நோய் தீராமல் மேலும் உடலில் பல நோய்கள் உண்டாக காரணமாக வழி செய்கிறது.

இயற்கை இன்சுலின் உடலில் சுரந்து நோய் தீர சித்த மருத்துவத்தில் ஆவாரை பஞ்சாங்கம், நாவல் பட்டை, நாவல் கொட்டை, வெந்தையம், வல்லாரை, பொற்சீந்தில், ஆலம் விழுது, சிறு குறிஞ்சான், மருதம் பட்டை, அரக்கீரை, வள்ளக்கீரை, அத்தி கொழுந்து இவைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்து இடித்து சலித்து சூரணமாக்கி காலை மாலை உணவுக்கு முன்பு வேளைக்கு அரை முதல் ஒரு டீஸ்பூன் வரை வென்னீர் அல்லது பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடலில் இயற்கையாக கணையம் இயங்கி அதன் வாயிலாக இயற்கை இன்சுலின் சுரந்து சர்க்கரை நோய் தீரும்.

கொடுமைகளை இழைத்த கூடாரத்திற்கே ஓடும் கங்கை அமரன் …..

இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் தம்பி என்ற ஒற்றை தகுதியை வைத்துக்கொண்டு திரையுலகில் தன்னை பொருளாதார அளவில் தன்னை செழுமையாக்கி கொண்டவர் கங்கை அமரன் ….

பிறப்பால் ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்தவர் பல பல தீண்டாமை கொடுமைகளை அனுபவித்த குடும்பம் இவரது குடும்பம்.

இவரது மூத்த அண்ணண் பாவலர் வரதாரஜன் அவர்கள் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக பொதுவுடமை கட்சிகளில் களமாடியவர் அக்கட்சிகளின் மேடைகளில் கச்சேரி நடக்கும்போது கங்கைஅமரனும் பங்கேற்று தீண்டாமை மற்றும் ஆதிக்க சாதிகளுக்கு எதிரான பாடல்களை பாடுவதுண்டு …..

பிறகு சினிமாவிற்கு வந்து அண்ணண் இளையராஜாவின் தயவால் அவரின் நிழலியே வளர்ந்து இயக்குனராக இசையமைப்பாளராக உயர்ந்தார் பொருளாதாரத்திலும் செழுமையடைந்தார் …

ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்து பல கொடுமைகளை அனுபவித்த இவர் உயர்ந்த பிறகு அந்த கொடுமைகளில் இன்னும் சிக்க தவிக்கும் மக்களுக்காக இதுவரை ஒன்றுமே செய்ததில்லை …

இந்த நிலையில் …நேற்று இவர் தன்னை பாஜகவில் ஐக்கியப்படுத்திக்கொண்டார் …

எந்த இந்துத்வ கொள்கைகள் இவரை ஒடுக்கியதோ ஊர் ஊராக ஓட வைத்ததோ தீண்டாமை கொடுமைகளை அனுபவிக்க வைத்ததோ அந்த இந்துத்வத்திற்கு தாளமிட சென்ற கங்கை அமரன் அவர்களே …

பொருளாதாரம் செழுமை பெற்றதும் தீண்டாமையால் ஏற்பட்ட வடுக்களை மறந்த உங்களின் மன போக்கு எத்தகையது ?

இன்னும் சாதிய கொடுமைகளால் அவதியுறும் மக்களின் பணம் தான் உங்களின் தற்போதைய செழுமைக்கு காரணம் என்பதை மறந்தது ஏன் ?

சேர்ந்த இடத்திலும் அங்கே இருப்பவர்கள் உங்களை ஒடுக்கபட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற கண்ணோட்டதோடுதான் பார்ப்பார்கள் என்பதை காலம் செல்ல செல்ல நீங்கள் உணருவீர்கள் ….

கங்கை அமரனின் இந்த அரசியல் பாதை பிணங்கள் மிதக்கும் கங்கையைவிட அசுத்தமானது என்பதை உரத்து சொல்வேன்.

‘நேற்று வரை நீ யாரோ… இன்று முதல் நீ வேறோ’

‘நேற்று வரை நீ யாரோ… இன்று முதல் நீ வேறோ’ ஆகிக்கிடக்கிறது கோடம்பாக்கம். வேறொன்றுமில்லை, அவ்வளவும் ஐ படத்தின் அறிவிப்பு செய்த மாயம். வரும்…ஆனா வராது ரேஞ்சிலேயே அப்படத்தை டீல் பண்ணி வந்த தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு முறையும் ஐ வருவதாக பேச்சிருக்கும் போதெல்லாம் அசராமல் தங்கள் படத்தையும் வெளியிட நாள் குறிப்பார்கள். நினைத்த மாதிரியே ஐ வராது. அவரவர் படங்களும் நிம்மதியாக ரிலீஸ் ஆகும்.

இந்த முறையும் ஐ பற்றி அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் இங்கே. பொங்கலுக்கு என்னை அறிந்தால், ஆம்பள, இவற்றுடன் கார்த்தி நடித்த கொம்பனும் வரும் என்று விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. ஆனால் எல்லாருடைய திட்டத்திலும் நாட்டு வெடிகுண்டை வீசியிருக்கிறது ஐ அறிவிப்பு. ‘பொங்கல் வெளியீடு’ என்று திட்ட வட்ட அறிவிப்புடன் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. படத்தை சென்சார் செய்யும் வேலைகளிலும் கன ஜோராக இறங்கிவிட்டார்கள்.

ஐ வந்தாலும் அஜீத் படம் வரும் என்கிறார்கள் இங்கே. ஏனென்றால் கடந்த பல்லாண்டுகளாகவே அஜீத்திற்கும் விக்ரமுக்கும் ஒரு அண்டர் ‘வார்’ சைலண்ட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அஜீத் பின்வாங்கினால் அதை ரசிகர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கொம்பன் எப்படி?

‘பொங்கல் என்னுடைய ராசி தினம்’ என்கிறாராம் கார்த்தி. ‘பருத்தி வீரன் பொங்கலுக்குதான் வந்துச்சு. சிறுத்தை பொங்கலுக்குதான் வந்துச்சு. ரெண்டு படத்தோட வெற்றியை பற்றி நான் சொல்லவே தேவையில்ல. அப்படியிருக்கும் போது இந்த பொங்கலை விட்டுட முடியுமா?’ என்கிறாராம் அவர். நடுவில் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டையும் காலை எடுத்து முன் வைக்கும் திட்டத்திலிருப்பதால் கோடம்பாக்கமே கலகல…

யாரை யார் வெல்லுவாரோ?