Friday, December 5, 2014

கழுத்து வலியும் அதை களையும் வழியும்!

நிமிடத்திற்கு நிமிடம் வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தற்போதைய உலகில் பெரும்பாலான மக்களுக்கு கழுத்திலும், முதுகிலும் வலி ஏற்படுகிறது. அதிலும் சுமார் 70 சதவீத மக்கள் அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ இந்த வலியினால் அவதியுறுகின்றனர்.நம் முன்னோர்கள் எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற சித்தர்களின் முதுமொழியை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கலாம்.

உண்மையில் மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

அறிகுறிகள்


கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு


பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்


மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது. இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

அன்புள்ள கணவருக்கு...




ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்.

நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்..

ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.

அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.

அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்..

இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.

அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்..

ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!!

ர – சினிமா விமர்சனம்

இந்தாண்டு வெளியான பேய்ப் பட வரிசையில் இது அடுத்தப் படம். சைக்காலஜிக்கல் திரில்லர் என்றார் இயக்குநர். படத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஆனால் ஏதோ சம்திங் சஸ்பென்ஸ் திரில்லர் படம்..!

ஹீரோ அஜய்யும், ஹீரோயின் ரென்யாவும் காதலர்கள். ரென்யாவின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணம் முடிந்து தனது வீடு திரும்பும் அஜய்யை அன்றைய இரவான முதல் இரவினை கோலாகலமாகக் கொண்டாட எண்ணுகிறார். அந்த நேரத்தில் அவரது காதலுக்கு உதவிய நண்பர்கள் கையில் பாட்டிலோடு வந்து அவருடைய பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள்.

அஜய்யும் பார்ட்டியில் கலந்து கொண்டு மப்பாகி தூங்கி விடுகிறார். காலையில் அவரது மனைவி படுக்கையில் இறந்து கிடக்கிறார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அது ஹார்ட் அட்டாக் என்கிறது. இதனால் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பித்தாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் அஜய்.

வேலையிலும் கவனத்தைச் செலுத்த முடியாமல்.. அன்றாட வாழ்விலும் நகர முடியாமல் தவிக்கிறார். இந்த நேரத்தில் அந்த வீட்டில் நடக்கும் சில சம்பவங்கள் யாரோ அவரது அருகில் இருப்பது போலவும் கூடவே நடமாடுவது போலவும் தெரிய வர.. பயப்படத் துவங்குகிறார்.

சில பயமுறுத்தல்களுக்கு பிறகு அது அவரது காதல் மனைவி ரென்யா என்றே அவருக்குத் தெரிய வர ரென்யா அந்த வீட்டில் பேயாக உலாவுவதாக நம்பத் துவங்குகிறார். அஜய்யின் நண்பர்களும், அம்மாவும், அக்காவும் இதை நம்ப மறுக்கிறார்கள். சாமியாரை வைத்து பூஜையெல்லாம் செய்கிறார்கள்.

பேய் எதற்கும் அடங்காமல் இருக்க.. பேயோடு பேசும் அனுபவம் வாய்ந்த ஒரு மருத்துவரை சந்தித்து தனது குறையைச் சொல்கிறான் அஜய். அந்த மருத்துவரும் ஒரு நாளில் மர்மமான முறையில் இறந்து போக.. திக்கென்றாகிறது.. மரணம் அடுத்து அஜய்யின் அக்காவையும் தொற்றிக் கொள்ள.. ஏதோ தப்பு நடக்கிறதோ என்று அஜய் நினைக்கிறார்.

அந்த நேரத்தில் அக்காவின் கணவர் வந்து சில விஷயங்களை பேச.. பொறி தட்டுகிறது அஜய்க்கு.. அஜய் நினைத்தது போலவே அவரது சந்தேகத்தில் விடை கிடைக்க.. உண்மையான குற்றவாளி கிடைக்கிறான்.. அது யார் என்பது சஸ்பென்ஸ்..!

உண்மையில் விமானிகளாகப் பணியாற்றி வரும் தயாரிப்பாளரும், நடிகரும் கோடம்பாக்கத்தை ஒரு வழி செய்வது என்று நினைத்து தைரியமாக களத்தில் குதித்திருக்கிறார்கள். முதற்கண் அவர்களது தைரியத்திற்கு நமது பாராட்டுக்கள்.

அஜய்யாக நடித்திருக்கும் கதாநாயகன் அஷ்ரப்.. தானும் தேர்வு செய்த கதை என்பதால் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். முழு படமுமே இவரை சுற்றியேதான் நகர்கிறது என்பதால் ஷாட் பை ஷாட் இவரேதான் வருகிறார்..  புதுமுகம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமான நடிப்பு.. திகிலூட்டும் இசை.. கேமிரா எதைக் காட்டப் போகிறதோ என்கிற சின்ன பயம்.. இதற்கு நடுவில் தானும் அதற்குச் சரிசமமாக நடித்திருக்கிறார். அலுவலகத்தில் கோபப்பட்டு, பின்பு தானே சமாதானமாகும்  காட்சியில் அசத்தல்.. அந்த பேயை பார்த்து பயப்படும் ஒவ்வொரு பிரேமிலும் கூடவே நம்மையும் பயமறுத்த வைக்கிறார்.. வெல்டன் ஸார்..

ஹீரோயின் அதிதி செங்கப்பா. அதிகம் வேலையில்லை. கொஞ்ச நேரம்தான் ஸ்கிரீனில் தென்படுகிறார். பின்பு அவ்வப்போது பாடல் காட்சிகளிலும், மாண்டேஜ் ஷாட்டுகளிலும் வந்து போனாலும் ரசிக்க வைத்திருக்கிறார். இவருடைய நண்பனாக வருபவர் அதிகம் சிகரெட் பாக்கெட்டுகளை ஊதித் தள்ளினாலும் ஒருவேளை இவராக இருக்குமோ என்கிற சந்தேகத்தை பார்வையாளர்களிடத்தில் திணிப்பது போன்ற காட்சியமைப்பில் நடித்திருக்கிறார்.

சரவணனின் ஒளிப்பதிவை எவ்வளவு வேண்டுமானாலம் பாராட்டலாம். இது போன்ற திரில்லர் படங்களில் கேமிராவின் பங்களிப்பு மிக அதிகமாக தேவை. அது அத்தனையும் இந்தப் படத்தில் இருக்கிறது. பேய் இருக்கா.. இல்லையா.. என்று நாம் கவலைப்படும் அளவுக்கு படத்தின் முற்பாதியில் பேயின் அட்டகாசங்களைக் காட்டி அமர்க்களம் செய்திருக்கிறார்.

இவருக்கு தோதான ஜால்ரா இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன்.. கூட்டி, குறைத்து காட்சிகளுக்கேற்றபடியே இசையைக் கொடுத்திருக்கிறார். அந்தக் குழந்தை வாசலில் விளையாடும்போது இசையே இல்லாமல் செய்து கவனத்தை ஈர்த்து அந்தக் காட்சியில் ஏதோ நடக்கப் போகிறதோ என்றெண்ண வைத்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

பிரபு யுவராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் அது திரில்லர் படங்களில் கவனிக்கப்படாது என்கிற கொள்கையுடன் கதையைத் தயார் செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

மகனின் முதல் இரவு அன்றே தாயும், தமக்கையும் மகனின் பிரைவசிக்காக வீட்டில் இருந்து வெளியேறுவார்களா..? அதுவும் அவ்வளவு பெரிய பிரமாண்டமான வீட்டில்..?

தாங்களே முன் வந்து சேர்த்து வைத்த காதலரின் முதல் இரவைக் கலைக்கும் வகையில் எந்த நண்பர்களாவது பாட்டிலோடு இரவு நேரத்தில் வீடு தேடி வருவார்களா..?

அந்த வீட்டில் பேய் இல்லை என்பது கிளைமாக்ஸில் நிரூபணமானாலும், பேய் இருப்பது போன்ற காட்சிகளை வைத்தது ஏனோ..? பின்பு பேய் இல்லையென்றால் அவையெல்லாம் எப்படி நடந்தன..?

ஒரு கட்டத்தில் இறந்து போன தனது மனைவியை பேயாக பார்த்து பயப்படுகிறார் ஹீரோ. இந்தக் காட்சியிலேயே ஹீரோ மனதளவில் பேயோடு செட்டாகிவிட்டார் என்றே தெரிகிறது. பின்பு எப்படி அவருக்கு அந்த பேய் இல்லாத சந்தேகம் ஏற்படுகிறது..?

கிளைமாக்ஸில் வில்லனையும் காட்டிவிட்டு, பின்பு பேயையும் காட்டி ‘தொடரும்’ என்று சொன்னால் இப்போது எதை நம்புவது..? எதை நம்பாமல் விடுவது என்கிற குழப்பம்தான் வருகிறது..

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.. பட்.. நமக்குத் தேவை சஸ்பென்ஸ்.. திரில்லர்.. அது போதுமான அளவு இதில் இருக்கிறது..

பேய்ப் பட ரசிகர்கள் பார்க்கலாம்..!

போனில் ஹாங்கிங் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

 ஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா, வாங்கும் போது பயன்படுத்த நல்லா இருக்கும், ஆனால் சில நாட்களில் ஸ்மார்ட்போன் உங்களுக்கு கொஞ்சம் பழகிவிட்டால் அதில் கண்ட அப்ளிகேஷன் மற்றும் கேம்ஸ்களை இன்ஸ்டால் செய்து கொஞ்ச நாட்களில் அது வேலையை காட்ட ஆரம்பித்து விடும். ஹாங்கிங் பிரச்சனை ஆன்டிராய்டு, ஐஓஎஸ், என எல்லா போன்களிலும் இந்த பிர்ச்சனை சகஜமான விஷயம் தான். எந்த வகையான போன்களை பயன்படத்தினாலும் அதுல ஏதாச்சு பிரச்சனை இருக்க தான் செய்யுது. அந்த வகையில உங்க போனில் ஏற்படும் ஹாங்கிங் பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பாருங்க...

ஆன்டிராய்டு;முதலில் ஆன்டிராய்டு போன் ஹாங் ஆனால் என்ன செய்யனும்னு பாருங்க சார்ஜ் - முதலில் உங்க போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் முறைகளை பின்பற்றுங்கள்

ஸ்விட்ச் ஆஃப்;பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள், ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்

ரீஸ்டார்ட்;பவர் பட்டன் மூலம் உங்க போன் ஆஃப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள்

பேட்டரி;உங்களால் ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்

ஆப்ஸ்;உங்க போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்து விடுங்கள்

பேக்ட்ரி ரீசெட்;ஹாங் ஆன பின் உங்க போன் ஆன் ஆகவில்லை என்றால் பேக்ட்ரி ரீசெட் கொடுங்கள், இது உங்க போனின் பிரச்சனைகளை சரி செய்து விடும் ஆனால் இதை மேற்கொண்டவுடன் உங்க போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் டெலீட் ஆகிவிடும்

ஐபோன்;ஐபோன்களில் ஹாங்கிங் பிரச்சனை வந்தாஸ் என்ன அடுத்து செய்ய வேண்டும்.......

ரீஸ்டார்ட்;ஆன்டிராய்டு போன்களை போலவே உங்க ஐபோனையும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்

ஆப்ஸ்;நீங்க பயன்படுத்தாத அப்லிகேஷன்களை டெலீட் செய்துவிடுங்கள், போதுமான மெமரி இல்லாததாலும் போன் ஹாங் ஆகலாம்.......!

பறக்கும் தட்டு வந்ததா?

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசிக்கும் ஸ்டீபானி வில்கெர்சன் என்ற பெண்மணிக்கு அண்மையில், ஒரு வினோத அனுபவம் கிடைத்தது. அவர், தனது வீட்டில் இருந்தபோது நள்ளிரவில் தற்செயலாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்களுக்கு சற்று தொலைவில் பல வண்ணங்களுடன் கூடிய ஒளிவட்டம் ஒன்று தெரிந்தது.

உடனே இது பற்றி பக்கத்து வீட்டில் இருந்த வாலிபருக்கு தெரிவித்து அவரிடமிருந்த தொலைநோக்கியை வாங்கி வந்தார். அந்த வண்ண ஒளி வட்டத்தை இருவரும் பெரிதாக்கி பார்த்தனர். பின்னர் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்துக் கொண்டே அவசர உதவி மையத்துக்கு தகவலும் தெரிவித்தனர்.

இதுபற்றி ஸ்டெபானி கூறுகையில், இந்த ஒளிவட்டம் விமானம் சென்றதால் ஏற்பட்டதோ என்று நினைத்தேன். ஆனால் அந்த ஒளிவட்டம் 20 நிமிடங்கள் அங்கேயே இருந்தது. மேலும் அந்த வண்ண நிறங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது என்றார்.

பென்சில்வேனியா விமான நிலைய அதிகாரிகள், அந்த குறிப்பிட்ட நேரத்தில் விமான இயக்கம் எதுவும் அப்பகுதியில் நடக்கவில்லை என்றனர்.

அந்த ஒளிவட்டம் வேற்று கிரகத்தின் பறக்கும் தட்டா என்ற மர்மத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

சர்ச்சைக்குரிய ஒரு சாமியாரின் உண்மைக்கதை

சட்டத்திற்கு சவால் விட்ட சர்ச்சைக்குரிய சாமியாரை நீண்ட போராட்டங்களுக்கு பிறகு கைது செய்திருக்கிறது ஹரியானா மாநில காவல்துறை. அவரை கைது செய்ததில் மாநில பா.ஜ.க. அரசு நிம்மதி பெருமூச்சு விட்டாலும் அவரது சீடர்கள் நடத்தி வரும் கிளர்ச்சிகளால் பஞ்சாப்-ஹரியானாவில் பதட்டம் அதிகரித்தப்படியே இருக்கிறது.

ஹரியானாவில் புகழ் பெற்ற சாமியார்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் ஜெகத்குரு(?) ராம்பால்ஜி மஹராஜ். ஹரியானாவின் ரோக்டாக் மாவட்டத்தில் சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் சத்லோக் ஆசிரமம் நடத்தி வருகிறார் ராம்பால். மன்னர் காலத்து கோட்டை போல அவரது ஆசிரமம் பிர மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அரசு களின் செல்வாக்கும் அரசியல்வாதி களின் செல்வாக்கும் ஒருங்கே பெற்ற ராம்பால்ஜியை கைது செய்திருப்பது வட மாநிலங்களில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாநில அரசு எடுத்த நடவடிக்கையால் காவல்துறைக்கும் சாமியாரின்rampal1 சீடர்களுக்குமிடையே நடந்த மோதல், துப்பாக்கிச்சூடு, பெட்ரோல் குண்டு வீச்சு, ஆசிட் வீச்சு என நடந்த வன்முறையில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள். நான்குநாள் நடந்த இந்த களேபரங்களால் ஒட்டுமொத்த ஹரியானாவும் ஸ்தம்பித்துப் போய்விட்டது.

ஹரியானா அரசின் போக்குவரத்து துறையில் சிறப்பு அதிகாரியாக பணிபுரியும் தமிழரான கஜேந்திரனிடம் ராம்பால் பற்றி விசாரித்தபோது, “”சோனிபட் மாவட்டத்திலுள்ள தனானா கிராமத்தில் 1951-ல் பிறந்தவர். அடிப்படையில் அவர் ஒரு டிப்ளமோ இன்ஜினியர். ஹரியானா அரசின் நீர்பாசனத் துறையில் இளநிலைப் பொறியாளராக பதவியில் இருந்தவர்.

1999-ல், “கபீர்தாசரின் 11-வது வழித்தோன்றல் நான் என பிரகடனப்படுத்தி, சத்லோக் ஆசிரமத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்தே, அவரது ராஜினாமாவை 2000-ல் ஏற்று அவரை வெளியே துரத்தியது ஹரியானா அரசு. அவரின் தத்துவ பிரசங்கத்திற்கு வட மாநிலங்களில் ஆதரவு பெருக, கோடிக்கணக்கில் நிதிகள் குவிந்தன. மாநில முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமத்தை தொடங்கினார். தனது பெயரையும் ஜெகத்குரு ராம்பால்ஜி மஹராஜ் என மாற்றிக்கொண்டார்.

ஆசிரம் அமைந்த ரோக்டாக் மாவட்டமே இவரது கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அதாவது, இந்த மாவட்டத்தில் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆக வேண்டுமாயின் ராம்பாலின் ஆசி இருந்தால் மட்டுமே ஆக முடியும். அந்தளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். ஆனால், ஆரிய சமாஜத்தின் ஆகப்பெரியவரான சுவாமி தயானந்த சரஸ்வதியைப் பற்றி இவர் மோசமாக விமர்சனம் செய்யத்துவங்க, ஆரிய சமாஜத்திற்கும் இவருக்கும் முரண்பாடுகள் வெடித்தன. அதிலிருந்தே சர்ச்சைக்குரிய சாமியாராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்” என்று ராம்பாலின் பின்னணி களைச் சுட்டிக்காட்டினார்.

2006-ல் இரு தரப்புக்கும் நடந்த வெட்டு-குத்து மோதலில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகிறார். இதில் ராம்பால் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்கிறது போலீஸ். இரண்டு வருடம் சிறையில் இருந்த சாமியார், 2008 மே 14-ல் ஜாமீனில் வெளியே வருகிறார். ஆனால், அன்று முதல் இன்று வரை கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டே இருந்தார். இதுவரை 43 தடவை வாய்தா வாங்கியிருக்கிறார். நீதிபதிகள் ஜெயபால், லிசாகில் பெஞ்ச், “நவம்பர் 5-ல் ராம்பால் ஆஜராக வேண்டும்’ என நோட்டீஸ் அனுப்பியது.rampal2

ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள் ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரண்ட்டை பிறப்பித்ததுடன், ராம்பாலை கைது செய்து நவம்பர் 10-ந்தேதி ஆஜர்படுத்துமாறு உள்துறை செயலாள ருக்கும் டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டனர். அதனையடுத்து ராம்பாலை கைது செய்ய காவல்துறையினரும் சிறப்பு அதிரடி படையினரும் ஆசிரமத்துக்கு போவார்கள். ஆசிரமத்தின் கதவே திறக்கப்படாது. வெளியே நிற்கும் சீடர்களுக்கும் போலீஸுக்கும் தகராறு நடக்கும். திரும்பி வந்துவிடுவார்கள். ஆளும் பா.ஜ.க. அரசும் சாமியார் மீது கை வைக்க ரொம்பவே தயங்கியது. பயந்தது. rampal3

10-ந் தேதி விசாரணை வந்தபோது, எங்கே ராம்பால்? கைது செய்துவிட்டீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, “இன்னும் கைது செய்ய முடியவில்லை. மேலும் டைம் வேணும்’ என்று அட்வகேட் ஜெனரல் பி.ஆர்.மகாஜன் சொன்னதுடன் சாமியாருக்கு உடல்நிலை சரியில்லை என்று மெடிக்கல் போர்டு தந்த ஒரு ரிப்போர்ட்டையும் தாக்கல் செய்கிறார். அதைப் பார்த்து கோபமடைந்த நீதிபதிகள், சட்டத்தை மதிக்காத ஒரு நபரை உங்களால் கைது செய்ய முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? என்று கண்டித்ததுடன், “ராம்பாலை கைது செய்து 17-ல் ஆஜர்படுத்த வேண்டும். இல்லையேல் ஹோம் செக்ரட்டரியும் டி.ஜி.பி.யும் கோர்ட்டுக்கு வரவேண்டியதிருக்கும்’ என எச்சரித்தனர்.

இதனையறிந்த சாமியார், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அப்பாவி ஏழை மக்களை குழந்தை குட்டிகளுடன் rampal4சுமார் 15 ஆயிரம் பேரை திரட்டி வந்து தனது ஆசிரமத்தில் வைத்துக்கொண் டார். கோர்ட் உத்தரவு படி 17-ந்தேதியும் கைது செய்யமுடியாததால் அரசையும் காவல் துறையையும் கடுமையாக விமர்சித்ததுடன், கைது பண்ணலைன்னா 2008-ல் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வோம் என எச்சரித்தனர் நீதிபதிகள். இதனால், ஹரியானா அரசுக்கு நெருக்கடி ஏற்பட, மத்திய உள்துறைக்கு அவசரமாக ஒரு கடிதத்தை அனுப்புகிறது மாநில உள்துறை. அதில், “ராம்பாலை கைது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆசிரமத்துக்குள் அவரது சீடர்கள் ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் அச்சப்படுகிறோம். அதனால், ஆசிரமத்தினுள் என்ன இருக்கிறது என் பதையும் ராம்பால் எங்கே பதுங்கியிருக்கிறார் என்பதையும் கண்டறிய ஆளில்லா வேவு விமானங்களை கொடுங்கள்’ என்று கேட்டுக்கொள்ள, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இதனை மறுத்ததுடன் “சட்டத் தின் ஆட்சியை நிலைநிறுத்த கடுமையான ஆக்ஷன் எடுங்கள்” என முதல்வர் கட்டாருக்கு அறிவுறுத்தினார்.

“”இதனால் நிலைமைகள் சீரியசாக, போலீஸ் படை, சிறப்பு காவல் படை, கமாண்டோ படை என மூன்று தரப்பினரும் புல்லட் புரூஃப் ஆடைகளை அணிந்தபடி ஆசிரமத்தின் முன்பு குவிய, அதற்கேற்ப சீடர்களும் குவிந்தனர். பதட்டம் அதிகரிக்க துவங்கியது. மதில் மீது ஏறி நின்று போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் சீடர்கள். பதிலுக்கு போலீசும் துப்பாக்கி சூடு நடத்த சீடர்களோ பெட்ரோல் குண்டுகளையும் ஆசிட் பாட்டில்களையும் வீசி அடித்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டில் முதலில் இரண்டு அப்பாவிகள் உயிரிழக்க, ஜே.சி.பி. இயந்திரங்களை வரவழைத்து 20 அடி உயரமுள்ள சுற்று சுவரை இடித்து தள்ள உத்தரவிட்டார் டி.ஜி.பி. வசிஸ்த். 4 ஜே.சி.பி.க் கள் சுவரை இடித்து தள்ளி உள்ளே சென்றது. அந்த ஜே.சி.பி.க்களை தீயிட்டு கொளுத்தினார்கள். டிரைவர்களோ தப்பித்து ஓடி வந்தனர்.

பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி சீடர்கள் மோதல்களில் ஈடுபட, “உள்ளே 200 கேஸ் சிலிண்டர்களும் 1000 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோலும் வைத்திருக்கிறார்கள். அதையே அவர்கள் ஆயுதங்களாக பயன்படுத்தக்கூடும். துப் பாக்கி சூடு நடத்தாதீர்கள்’ என்று உத்தர விட்ட டி.ஜி.பி., “உங்களை பலிகடாவாக்க நினைக்கிறார் சாமியார். முப்பது நிமிடம் டைம் தரேன். ஒதுங்கிக்கொள்ளுங்கள்’ என மக்களை எச்சரிக்கை செய்ய, அப்பாவிகள் மெல்ல, மெல்ல விலக ஆரம்பித்தனர். அப்போது, உள்ளே நுழைந்த போலீஸ், மூன்று பிரிவாக பிரிந்து ஒரு பிரிவு மக்களை மீட்டது, மற்றொரு பிரிவு சீடர்களோடு மோதி அவர்களை தடுத்தது, அடுத்த பிரிவு ராம்பாலை கைது செய்ய ஆசிரமத்தில் தேடுதல் வேட்டையை நடத்தியது. 18 மணி நேரம் நடந்த இந்தத் தொடர் ஆபரேசனில், சொகுசு அறையில் பதுங்கியிருந்த சாமியாரை 19-ந்தேதி நள்ளிரவில் கைது செய்தோம்” என்று விவரித்தனர் ஹரியானா போலீஸார்.

கைது செய்யப்பட்ட சாமியார்மீது தேசத் துரோகம், கொலை, மத துவேசம் உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்துள்ளன. சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருந்த சாமியாரை கைது செய்து நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது ஹரியானா பா.ஜ.க. அரசு.

என்ன கொடுமை சரவணா !!இங்கு இவரை உண்ணலாம் உயுருடன் வேண்டாமாம்!!!

பயணிகள் விமானத்தில் தனது செல்லப்பிராணியான பன்றியொன்றையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற பெண்ணொருவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கனக்டிகட் மாநிலத்தின் பிராட்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யூ.எஸ். எயார்வேஸ் நிறுவனத்தின் விமானமொன்றில் பெண்ணொருவர் பன்றியொன்றுடன் ஏறினார்.

சக பயணிகள் பலர் அதை ஒரு பை என்றே முதலில் எண்ணினராம். ஆனால், அதிக துர்நாற்றம் எழுந்ததால் அது பன்றி என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்துகொண்டனர்.

அப்பன்றி பின்னர் விமானத்துக்குள் ஓடித்திரிந்ததாகவும் அதன் உரிமையாளரான பெண் விமானத்தில் அழுக்கேற்பட்ட இடங்களை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பயணிகள் பலர் இப்பன்றியை விமானத்தில் கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்பன்றியுடன் அதன் உரிமையாளரான அப்பெண்ணும் விமானத்திலிருந்து அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.
மேற்படி பன்றி சுமார் 35 கிலோ எடையுடையதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை முறையில் பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்!


 உணவுக்கு பின்பு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

 * துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

 * 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

 * காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

 * தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

 * அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

 * கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

 * பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

 * சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

 * குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

 * காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

 * வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

உலகின் பிரபலமானவர்கள் பட்டியல்: முதல் இடத்தில் இந்தியாவின் ...

 டைம்ஸ் பத்திரிகையின் உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபரான ஒபாமாவுக்கு 11 ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது.

அதன்படி, 2014 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வாக்கெடுப்பில், சில தினங்களுக்கு பிரதமர் மோடி முதல் இடத்தில் இருந்தார். ஆனால் 4 தினங்களுக்கு முன், 2 ஆவது இடத்துக்கு வந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்த வாக்குகளில் 12.8 சதவீத வாக்குகள் பெற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். பெர்கூசன் போராட்ட குழு 10.1 சதவீத வாக்குகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.

 ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடி வரும் இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஜோசுவா வோங் 7.5 சதவீத வாக்குகளுடன் 3 ஆவது இடத்திலும்,

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் 5.2 சதவீத வாக்குகளுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழு 4.5 சதவீத வாக்குகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் 4.1 சதவீத வாக்குகளுடன் 6 ஆவது இடத்திலும்,

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2.3 சதவீத வாக்குகளுடன் 11 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு சனிக்கிழமை முடிவடைகிறது. இந்த ஆண்டின் சிறந்த மனிதர் யார் என்பதை டைம்ஸ் பத்திரிகை 10 ஆம் தேதி தேர்வு செய்து அறிவிக்க இருக்கிறது.

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..




தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!


அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.



1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.



இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.



 கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

கமலின் ஐடியாவை கையில் எடுத்துள்ள தலிபான் தீவிரவாதிகள் ?

 ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பறவைகளைத் தற்கொலைப் படையாகப் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ படையை எதிர்த்து தலிபான் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். மேலும் தற்கொலை படை அமைப்பின் மூலம் மனித குண்டு தயார் செய்து பொது மக்கள் கூடியிருக்கும் இடங்களில் அடிக்கடி வெடிக்கச் செய்து வருகின்றனர்.

அதையும் ராணுவம் மற்றும் காவல் துறையினர் கண்டுபிடித்து முறியடித்து விடுகின்றனர். எனவே, தற்போது தற்கொலை தாக்குதல் நடத்த புதுவிதமான நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அவர்கள், மனிதர்களுக்கு பதிலாக பறவைகளைத் தற்கொலை படைக்குப் பயன்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் பர்யாப் மாகாணம் துர்க்மெனிஸ்தான் எல்லையில் உள்ளது.

அங்கு மிகப்பெரிய பறவை ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த ராணுவ அதிகாரிகள் பறவையை சுட்டு வீழ்த்தினர்.

சுடப்பட்ட பறவையின் இறக்கையில் பேட்டரிகளுடன் கூடிய மின் வயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதன் உடலில் தற்கொலை படை தீவிரவாதிகளின் உடை அணிவிக்கப்பட்டிருந்தது.


உடலில் வெடி பொருட்கள் இருந்தன. அதை வெடிக்க செய்யும் செல்போன் டெட்டனேட்டர்களும் இருந்தன. இதன் மூலம் பறவைகளை தற்கொலை படையாக தலிபான்கள் மாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திலும் தலிபான் தீவிரவாதிகள் பறவைகளை தற்கொலை படைக்கு பயன்படுத்துவதை போனறு காட்சிகள் அமைத்திருந்தார். இன்று அதே பாணியை தலிபான் தீவிரவாதிகள் கையில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியது.

திருச்சி சிறை வாசலில் இன்ஸ்பெக்டரை செருப்பால் அடித்த கைதியின் மனைவி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தமிழ்ச்சோலையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27). இவர் திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களில் ராமச்சந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமச்சந்திரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதற்கிடையில் சிறையில் இருந்த ராமச்சந்திரனுக்கு ஜாமின் கிடைத்து நேற்று வெளியில் வர இருந்தார். இதனால் அவர் வெளியில் வந்ததும் மீண்டும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதன் படி இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் சிறை வாசலில் தயாராக நின்றனர். அதே நேரத்தில் சிறையில் இருந்து வெளியில் வரும் மகேந்திரனை அழைத்து செல்ல அவரது மனைவி செல்வியும் சிறை வாசலில் நின்றிருந்தார். அப்போது சிறையில் இருந்து வெளியில் வந்த ராமச்சந்திரன் போலீசார் நிற்பதை கண்டதும் தப்பி ஓடினார். அவரை துரத்தி சென்ற போலீசார் மடக்கி பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.

அப்போது ராமச்சந்திரனின் மனைவி செல்வி போலீஸ் ஜீப்பை மறித்து நின்றார். ஜீப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கீழே இறங்கி செல்வியிடம் வழி விடுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வி தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி இன்ஸ்பெக்டரை அடித்தார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஜீப்பை விட்டு இறங்க முயன்றனர். ஆனால் அவர்களை தடுத்த இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஜீப்பில் ஏறி உடனே அங்கிருந்து கிளம்பினார்.

ஃபேஸ்புக்கிற்கு ஆப்பு வைக்கும் மெசேஜ் 'ஆப்'கள்

 ஃபேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்களை அனுப்பவது கடந்த மாதம் உலக அளவில் வெகுவாக குறைந்துள்ளது. மக்களிடையே ஃபேஸ்புக் மீதான மோகம் குறைந்து வருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஃபேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புவது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது 20 சதவீதம் குறைந்துள்ளது என்று லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குளோபல்வெப்இன்டெக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக் மீதன மோகம் குறைய செல்போன்களில் உள்ள மெசேஜ் அப்ளிகேஷன்கள் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக்

 ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு கடந்த மாதம் மெசேஜ் அனுப்பியவர்களின் எண்ணிக்கை உலக அளவில் வெகுவாக குறைந்துள்ளது.

 இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் 28 சதவீதம் பேர் என்ன நடக்கிறது என்பதை பார்க்க மட்டுமே ஃபேஸ்புக் செல்வதாகவும், எதையும் போஸ்ட் செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அப்ளிகேஷன்கள்

இளம் வயதினர் செல்போன்களில் உள்ள மெசேஜ் அப்ளிகேஷன்கள் மூலம் மெசேஜ் அனுப்பவும், புகைப்படங்களை பகிரவும் விரும்புகிறார்கள்.

 ஃபேஸ்புக் பயன்பாடு குறைவதற்கு அது போர் அடிப்பது, விருப்பம் இல்லாமை, தனிமை(பிரைவசி) இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது.

இந்தியாவில் நெட் பயன்படுத்துவோரில் 68 சதவீதம் பேர் 2013ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வீசாட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். வாட்ஸ் ஆப்பில் 62 சதவீதம் பேரும், ஃபேஸ்புக்கில் 63 சதவீதம் பேரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

 மெசேஜ் அப்ளிகேஷன்கள் துரிதமாக உள்ளதாக ஆய்வில் கலந்து கொண்ட 1 லட்சத்து 70 ஆயிரம் பேரில் 41 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ரோட்டக் சகோதரிகள் வாலிபர்களை அடித்தது நாடகமா?

 நாடு முழுவதும் இந்த வார துவக்கத்தில் இருந்து கதாநாயகிகளாக பார்க்கப்பட்ட அரியானா சகோதரிகள் பஸ்சில் பயணம் செய்த வாலிபர்களை வேண்டும் என்றே அடித்தார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

முன்னதாக சகோதரிகள் இருவரிடம் மூன்று வாலிபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையின் போது இளைஞர்கள் மூவரும் தாங்கள் அப்பாவிகள் என்றும், இரு சகோதரிகளிடம் எவ்வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தனர். மேலும் அப்பெண்கள் மூன்று வாலிபர்களை அடிக்கும் போது, கர்ப்பிணி பெண் ஒருவர் அக்காட்சிகளை படமெடுத்தாக கூறப்பட்டது. ஆனால் அந்த பெண்ணை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சகோதரிகள் இருவரும் பூங்கா ஒன்றில் வாலிபரை அடிக்கும் மற்றொரு வீடியோ காட்சி வெளியானது. இதற்கு பின் பேசிய அப்பெண்கள் தங்களை அநாகரிகமாக பேசிய வாலிபரை தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையும் யாரோ ஒருவர் படம் பிடித்ததாக இருவரும் கூறினார்கள். இந்த வீடியோவையும் யார் எடுத்தார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சகோதரிகள் இருவர் மட்டும் சம்பந்தப்பட்ட வீடியோக்களை யார் தான் எடுத்தார்கள் என்பதற்கு சரியான விடையும் கிடைக்கவில்லை. இரு சகோதரிகளும் ஏறக்குறைய 2000 வாலிபர்கள் தங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அதே சமயம் மூன்று வாலிபர்களை கைது செய்து விசாரித்து வரும் காவல்துறை அதிகாரிகள் முன், பேருந்தில் வந்த வயதான பெண்மணி ஆஜரானார். அவர் மூன்று வாலிபர்களும் எவ்வித தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் பேருந்தின் நடத்துனரோ, அப்பெண்கள் இருக்கைக்கு அருகே நிற்காமல் விலகி செல்லும்படி மூன்று வாலிபர்களிடமும் கூறியதாக தெரிவித்தார். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் கத்தாரை சந்தித்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினர், இரு தரப்பையும் தீர விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது அவர், விசாரணை யாருக்கும் சாதகமாக இல்லாமல் நேர்மையாக நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் சகோதரிகள் இருவருக்கும் வழங்கப்படுவதாக இருந்த பரிசுத்தொகையை காவல்துறை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து

 21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்ட பஞ்சாயத்து, அரசமரத்து பஞ்சாயத்து நடைபெற்றுதான் வருகிறது. இந்த பஞ்சாயத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண்கிறோம். அந்த வகையில், பீகார் மாநிலத்தில், 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கருவை கலைக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 16 வயது சிறுமியை 4 காமூகர்கள் கடந்த 7 மாதத்திற்கு முன் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த கொடுமைக்கு அந்த 4 பேருக்கும் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று அந்த சிறுமி பஞ்சாயத்தை நாடியுள்ளார்.

ஆனால், 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு கருக்கலைப்பு செய்துவிட வேண்டும் என்று அந்த சிறுமிக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

சிறுபான்மை சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் கிசான்கஞ்ச் மாவட்டம், பீகாரின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகும்

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்!

 

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

மெலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?

How do valaittantu soup ?  Valaittantai cut into small pieces with ginger , lemon juice , pepper , small onion , cumin mixed with a little oil and then talittu nirvittu boiled soup and drinking like a drug

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

கையை பிரித்து குதிகால் அல்லது கணுக்காலை பற்றி பிடிக்க வேண்டும். வயிற்றை முன்னோக்கி தள்ளி ஆசனத்தை சரி செய்யவும்.

30 எண்ணிக்கை சாதாரண மூச்சில் இருக்கவும்.

குதிகால்கள் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து திரும்பவும் செய்யவும். மூன்று முறை செய்தால் போதும்.

பலன்கள்:

ஆஸ்த்மா, ரத்த சோகை போக்கும். சிறு வயதில் ஆரம்பித்தால் உயரம் பெறலாம். கண் பார்வை தெளிவடையும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. கூன் முதுகு நிமிர்கிறது.

சர்க்கரை - மருத்துவ பயன்கள்!


 பொதுவாக சர்க்கரை ஒரு ஆரோக்கியமற்ற பொருள் என்று தான் தெரியும். ஆனால் இந்த சர்க்கரை அழகுப் பராமரிப்பில் சிறந்தப் பொருளாக உள்ளது. எப்படியெனில், சர்க்கரையைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், சருமத்தின் மென்மைக்கு இடையூறாக இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவற்றை எளிதில் வெளியேற்றிவிடும்.

அதற்கு சர்க்கரையை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது அதனை வேறு சில சரும பராமரிப்பு பொருட்களுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதிலும் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமம் மிகவும் மென்மையாகிவிடும்.

அதுமட்டுமின்றி, சர்க்கரை முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும் குணம் கொண்டவை. எப்படியெனில் சர்க்கரையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்யும் போது, சருமத் துளைகள் திறந்து, அதிலுள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்குவதோடு, சரும செல்கள் எளிதில் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.

• அவசரமாக வெளியில் கிளம்பும் போது, சர்க்கரையை தண்ணீரில் கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை 5 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், சருமம் சுத்தமாக பொலிவோடு காணப்படும்.

• கிளின்சரில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, ஈரமான துணியால் துடைத்து, பின் நீரில் கழுவலாம். இதனாலும் சருமம் அழகாக ஜொலிக்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

• எலுமிச்சை சாற்றில் சிறிது நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் முற்றிலும் நீங்கி, சருமம் பொலிவுறும்.

• க்ரீன் டீயில் ஆன்டி-ஏஜிங் தன்மை அதிகம் இருப்பதோடு, அது சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள திசுக்களை குணமாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே க்ரீன் டீயில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கி, முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.

• தேங்காய் எண்ணெயில் சிறிது சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தை ஸ்கரப் செய்யலாம். வேண்டுமெனில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

அரசியல்வாதிகளின் அருவறுக்கதக்க சர்ச்சை பேச்சுகள் ஒரு சிறப்பு பார்வை !

 இந்திய அரசியல்வாதிகள் தடலாடியாக சில கருத்துகளைத் தெரிவித்துவிட்டு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது..

பிரதமர் மோடி, அவரது அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கும் இந்த சர்ச்சைப் பேச்சு பட்டியலில் இடமிருக்கிறது.

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்த நாட்டின் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகள் என்று கூறப் போய் பெரும் சர்ச்சை வெடித்தது. இதில் அவர் நாடாளுமன்ற இரு சபைகளிலும் மன்னிப்பு கேட்டும் பிரச்சனை ஓயவில்லை.

 இதேபோல் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தவர்கள்...

# 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, நாம் பயணம் செய்யும்போது காரில் நாய்க்குட்டி அடிப்பட்டால் வருத்தப்பட மாட்டோமா என்று கூறியிருந்தார். பின்னர் தமது கருத்துகள் திரிக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார் மோடி.

# விநாயகன் உடலில் யானை தலை பொருத்தப்பட்ட காலத்திலேயே தொடங்கிவிட்டது பிளாஸ்டிக் சர்ஜரி முறை என்று மோடி பேசியதும் சர்ச்சையை உருவாக்கியது.

 # உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், குஜராத்தைப் போல உத்தரப்பிரதேசத்தையும் மாற்றிவிடலாம் என மோடி கருதுகிறார். குஜராத்தில் 4% முஸ்லிம்கள்தான்... உத்தரப்பிரதேசத்திலோ 42% முஸ்லிம்கள் இருக்கின்றனர். அப்படி மோடி நினைத்தால் அவரை துண்டு துண்டாக வெட்டிப் போடுவேன்.. ஒருவரை கொல்லவோ தாக்கவோ நான் பயப்படமாட்டேன் என்று கூறினார். ஆம்

# ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பார்தி, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் ஷால்வே மற்றும் அருண்ஜேட்லி முகத்தில் காரித் துப்புவேன் என்று பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சை வெடித்தது.

 # லோக்சபா தேர்தலின் போது, பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி "கழுதை" என விமர்சித்ததும் பஞ்சாயத்தை ஏற்படுத்தியது.

# பீகார் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி, பீகாரின் பூர்வடிகள் பழங்குடி இனத்தவர்; தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே. இதர உயர்ஜாதியினர் எல்லாம் ஆரியவழித்தோன்றல்கள்.. வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து குடியேறியவர்கள் என்று விமர்சிக்க அவர் மீது வழக்குகளும் போடப்பட்டன.

# தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவர், பிரதமர் மோடியை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று சாடியிருந்தார்.

# சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான், மோடியை ஒரு பெரிய நாய் என்றும் காங்கிரஸ் கட்சியின் பேனிபிரசாத் வர்மா நாய் என்றும் சாடி பெரும் சர்ச்சை உருவானது.

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!


• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.

• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு
 கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.

• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.

• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.

• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.

• கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

• கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.

• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

ஓட்ஸ் சம்பா ரவை இட்லி! சமையல்!

 

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப்,

சம்பா கோதுமை ரவை - அரை கப்,

தயிர் - ஒரு கப்,

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஒன்று,

கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,

இஞ்சி - சிறிய துண்டு

 கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:


• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

• பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும்.

• கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

• பிறகு, இந்தக் கலவையை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

• சுவையான, சத்தான ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி

கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள்!


 கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள்




கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

பெண்களுக்கான பாட்டி வைத்தியம்!


பெண்களுக்கான பாட்டி வைத்தியம்


பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.

* மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

* மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

* வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.

* இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்.

* அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.

* கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்..

டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது. 

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.

Blog Archive