Monday, December 22, 2014

என் அண்ணன் படத்தில நடிக்கிறேன்… உங்களுக்கு ஏன்யா எரியுது…?

நடிகர் ப்ரேம்ஜிக்கு ட்விட்டரில் 4 லட்சத்து 30 ஆயிரம் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் ப்ரேம்ஜி மீது ரொம்பவே கோபத்தில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. ப்ரேம்ஜி ஏதாவது ட்விட்டரில் எழுதினால், அதற்கு கமென்ட் எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி ஏதாவது எழுதி ப்ரேம்ஜியை கடுப்பாக்கிவிடுகிறார்கள்.

 இதனால் டென்ஷனான ப்ரேம்ஜி ‘நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை… மருந்தடிச்சு கொல்லுடா…’ என்றும் கூட ட்விட்டரில் எழுதியிருக்கிறார். இப்போது ஒரு படி மேலே போய் ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் “என்னை வெறுப்பவர்களுக்கு இந்த வீடியோவை அர்ப்பணிக்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார் ப்ரேம்ஜி. டிவி நிகழ்ச்சி ஒன்றில் ப்ரேம்ஜியும் வெங்கட்பிரபுவும் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

அப்போது தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் ப்ரேம்ஜி, “எங்க அண்ணன் படத்துல நான் நடிக்கிறேன்… உனக்கு ஏன் எரியுது…? உனக்கு ஏன்யா எரியுது… வேலையப் பாருய்யா… யோவ்…” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் ப்ரேம்ஜி.

சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா?

தற்போது உள்ள வாழ்க்கை முறையில் அனைவரையும் சர்க்கரை நோய் எளிதாக தாக்கிவிடுகிறது.

சரியான உணவு முறைகளை பின்பற்றினால் சர்க்கரை நோயின் தாக்குதலை தவிர்க்க முடியும். நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமானது.

உணவியல் வல்லுநர்கள் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருத்துவர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில உணவுகளை பரிந்துரைத்துள்ளனர். அவற்றை பற்றி பார்க்கலாம்.

காய்கறிகள்

அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

பழங்கள்

அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது. அதனால் இதை அதிகமாக உண்ணக்கூடாது.

வெந்தயம்

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தக்காளி

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பாதாம்

தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

பால்

பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

இயற்கை இனிப்பு

இனிப்பு சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

 மதுபானம்

நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச் சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அசைவ உணவு

அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டுக் இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

உணவு பழக்கம்

சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக நிற்கும்.

ஜெ.,வை - போதையில் பேசினால்..விஜயகாந்த்தை உள்ள வச்சி மாறுகால் மாறுகை எடுத்துடுவன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியது. அப்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ ராஜா அதிமுகவுக்கு  ஆதரவாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியே கட்அவுட் வைத்தார்.

காவல் துறையில் உள்ள ஒருவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது போலீஸ் அதிகாரிகள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கட்அவுட்டை இரவோடு இரவாக போலீசார் அப்புறப்படுத்தினர்.

ஆனால், கட்அவுட் வைத்த ராஜா மீது  துறை ரீதியிலான எந்த நடவடிக்கையும் இல்லை. இதைத் தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை  தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அதே சிறப்பு எஸ்ஐ ராஜா தனது சீருடையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு  தெரிவித்தார்.

இதுவும் போலீசார் மட்டும் அல்லாமல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதும் அவர் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், போலீசார் தற்போது தனக்கு சல்யூட் அடிப்பதாக  கூறி இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து விஜயகாந்த்திற்கு எதிராக வாட்ஸ் அப்பில்
ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது: மதுரையில் பேசிய விஜயகாந்த், 3 வருடமாக சல்யூட் அடிக்காத போலீஸ்காரங்க இன்று என்னைப் பார்த்து சல்யூட் அடிக்கிறாங்க என்று பேசி இருக்கிறார்.

அவர் எம்எல்ஏ  என்ற முறையில் சல்யூட் அடித்து இருப்பார்கள். அதையே அவருக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, எங்கள் தமிழகத்தின் தவப்புதல்வி, மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி  அம்மா சிறை சென்றுவிட்டதால் சல்யூட் அடிக்கிறார்கள் என்று கூறியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன்.

இதுமாதிரி பேசுவதை இதோடு நிறுத்தி கொள்ளுமாறும், ஜெயலலிதாவை போதையில் பேசினால் அவர் மீது எம்எல்ஏ என்றும் பாராமல் அவதூறு வழக்கு தொடர  வேண்டியது இருக்கும் என்றும் எச்சரிக்கிறேன். இப்படிக்கு சிந்தாதிரிப்பேட்டை சிறப்பு எஸ்ஐ ராஜா என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் சிறப்பு எஸ்ஐ ராஜாவின் இந்த வாட்ஸ் அப்  தகவல் தேமுதிகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.