Wednesday, December 10, 2014

சோனியா காந்தி மகளை கழுத்துக்கு கிழே ரசித்த MLA.. (பரபரப்பு வீடியோ)

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியிலுள்ள சட்டசபை கட்டிடத்தில் பேரவை கூட்டத்தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று காலை அவைக்கு வந்த பீதர் மாவட்டம், அவுராத் தொகுதி எம்.எல்.ஏ பிரபு சவான், மாலையில் பேரவை நடந்து கொண்டிருந்தபோது தனது இருக்கையில் இருந்தபடி எதையும் சட்டை செய்யாமல் செல்போனில் எதை எதையோ நோண்டியபடி இருந்தார் பிரபு.

அப்போது கேலரியில் இருந்த படங்களையும் அவர் பார்த்தார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தியின் படமும் இருந்தது. பிரியங்கா காந்தி, பேண்ட், சட்டை போட்டிருந்த படம் அவரது செல்போனில் இருந்தது. அந்த படத்தை ஜூம் செய்த எம்.எல்.ஏ சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் ஜூம் செய்தது முகத்தை அல்ல. ஆபாசமான கோணத்தில் கழுத்தின்கீழே அவர் ஜூம் செய்து வைத்திருந்தார். சபையின் மாடத்தில் இருந்து அவை நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்த கன்னட செய்தி சேனல் வீடியோகிராபர்கள் இதை படம் பிடித்து ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர்........!

கோஹ்லியின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பவுன்சர்! பதறிய ஆஸ்திரேலியா வீரர்கள்!!

 ஆஸ்திரேலியா வீரர் ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து இந்திய வீரர் கோஹ்லியின் ஹெல்மெட்டை பதம் பார்த்ததால் அடிலெய்டு மைதானத்தில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. கோஹ்லிக்கு எந்த பாதிப்பில்லை என்று அறிந்த பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பினர் ஆஸ்திரேலியா வீரர்கள். பவுன்சர் பந்து தாக்கி ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் உயிரிழந்ததால் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இப்போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நேற்று முன் தினம் தொடங்கியது.

சதமடித்த மும்மூர்த்திகள்

 முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ரன்களை மலைக்க வைக்கும் அளவுக்கு குவித்தனர். அந்த அணியின் வார்னர், கிளார்க், ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர்.

2வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன்களைக் குவித்திருந்தது ஆஸ்திரேலியா. இந்த நிலையில் இன்று 3 வது நாள் ஆட்டம் தொடங்கியது. 517 ரன்களை எடுத்திருந்த ஆஸ்திரேலியா ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா களமிறங்கியது.

இந்திய அணியின் நல்ல தொடக்கம் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும் தவானும் களமிறங்கினர். இருவரும் ஒருநாள் போட்டிகளைப் போல ரன்களைக் குவிக்க தொடங்கினர். தவான் 24 பந்துகளில் 25 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து முரளி விஜய்யுடன் புஜாரா இணைந்து கொண்டார்.

முரளி விஜய் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோஹ்லி களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.


கோஹ்லியை பதம் பார்த்த பவுன்சர்

அப்போது 31வது ஓவரில் ஆஸ்திரேலியா வீரர் ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து கோஹ்லியின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது.

இதனால் ஜான்சன் உட்பட ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் பதறிப் போனார்கள். உடனே பவுன்சர் பந்து பட்டு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதா? என்ற அச்சத்துடன் அவர்கள் கோஹ்லியிடம் போய் நலம் விசாரித்தனர். கோஹ்லி ஹெல்மெட்டை தலையில் இருந்து கழற்றி பாதிப்பு இல்லை என்று கூறியபோதுதான் ஆஸ்திரேலியா வீரர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

பவுன்சர் பந்து பட்டு சக வீரர் ஹியூக்ஸ் சில வாரங்களுக்கு முன்புதான் மறைந்தார் என்பதால் அந்த பதற்றம் ஆஸ்திரேலியா வீரர்களிடம் வெளிப்பட்டது. இதன் பின்னர் மைதானம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

கொள்ளை லாபம் பார்க்கும் டீ, காப்பி தொழில்! – ஆச்சரியத் தகவல்!



லாபம் கொழிக்கும் டீ காப்பி கடை தொழில். (தமிழர்களுக்கு தெரியல.. கேரளா நாயர்களு க்கு தெரிந்து இருக்கிறது)

பால்விலை உயர்வின் காரண மாகத் தமிழ்நாட்டில் டீ, காப்பி விலை குவளைக்கு ரூ.1 – ரூ. 2 வரை உயர்கிறது. இதனால்

சாதாரணத்தெருவோர டீ/காப்பி கடைகளில்

ரூ.9/-க்கு ஒரு குவளை டீ ………ரூபாய் 11 க்கு காப்பியும் விற்கப் போவதாக அறிவிப்பு.
இதன் அடிப்படையில் ஒரு புறம் சாதாரண மக்களின் பசி ஆற்றும் டீ இப்போது ஆடம்பர பானமாக மாறும் அவலம் ஏற்படதான் போகு து.

மறுபக்கம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 38 க்கு விற்கப் படுவது..அன்றாடம் வீட்டில் டீ காப்பி குடிக்கும் குடும்பத்தாருக்கு டீ காப்பி என்றால் வயிற்றில் புலியை கரைப்பதாக ஆகும்.
ஆவின் பாலை நம்பி பிள்ளையைப் பெற்ற பெண்களுக்கு..இந்த விலை உயர்வு தாய்பாலை பீச்சி புட்டி பாலாக குழந்தைக்கு விட்டு தன் அலுவலங்க ளுக்கு செல்லும் அவல‌மாக மாறும். தாய் பால் நின்றுபோன பெண்களின் நிலையை உங்கள் பார்வைக்கே விட் டு விடுகிறேன்.

இந்தவிலை உயர்வு ரோடோரம் டீ காப்பி கடை நடத்துபவர்களுக்கு ஒருவிதத்தில் லாபமாக அமைய லாம்.
ரூபாய் 9 x குறைந்தது 500 டீ = ரூபாய் 4500 ஒரு நாள் வருமானம்
ரூபாய் 4500 x 30 = ரூபாய் 1,35,000 ஒரு மாத வருமானம்
   
மாத செலவுகள்:

கடை வாடகை, ஆட்கள் கூலி, பால், இதர எல்லாம்சேர்த்து அதிக பட்சம் ரூபாய் 75,000 ஆனாலும்…மாத லாப ம் குறைந்தது ரூபாய் 60,000 எட்டும். இன்று பன்னாட்டு சாப்ட்வேர் கம்பனி களில் கூட இந்த சம்பளம் கிடைப்பது அரிதே. ஹ்ம்ம்ம்.

இது டீ மட்டுமே கணக்கில் எடுத்து க்கொள்ள‍ப்பட்ட‍து. மேலும் காப்பி, பால், லெமன் டீ, கரீன் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, போன்விட்டா, ஹார் லிக்ஸ், பூஸ்ட், போன்றவற்றிற்கு கூடுதல் விலை நிர்ணயம் வேறு. அதுமட்டுமா? உருளைக் கிழங்கு போண்டா, சாதாரண போண்டா, கஜுரா, வாழைக்காய் பஜ்ஜி, பிரெ ட் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி, மெதுவடை, மசால் வடை, சமோசா, பிஸ்கட்வகைகள், கேக், பன் போன்ற வைகள் ஒரு நாளைக்கு எவ்வ‍ளவு விற் கும் என்று நீங்களே கணக்குப்போட்டு ப்பாருங்கள் நீங்களே வியப்பில் வாயை ப்பிளப்பீர் கள்.

அதுமட்டுமா? சில தேனீர் கடைகளில் மேற்காணும் வகைகளோடு சேர்ந்து பழச்சாறுகளையும் சேர்த்து விற்கின்றனர். என்ன‍ மலைப்பாய் இருக்கிறதா?

பாரப்ப‍தற்கு சாதாரண டீ கடை தா னே என்ன‍ வருமானம் வந்து விடப் போகிறது என்று நினைத்தோம் ஆனால் இவ்வ‍ளவு வருமானம் வரு வதால்தான் நம்மூரில் தெருவுக்கு நான்கைந்து டீக் கடைகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டிருக்கின்றன•

குறிப்பு

மேலே, டீக் கடையில் வரும் வருமா னத்தை மட்டுமே கணக்குப் பார்க்கப் ப‍ட்டுள்ள‍து. ஆனால் இந்த தொழிலு க்குத் தேவை மிதமிஞ்சிய (அசாதா ரணமான‌) உடல் உழைப்பையும் முதலீடாக செய்ய‍ தயாராக இருப் ப‍வர்க ளால் மட்டுமே இது சாத்தியம் என்பது கூடுதல் தகவல்.

மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்

வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த 'Win32/Ramnit' என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என்று இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 இந்த வைரஸ் தான் நுழைந்த கணனிகளில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது. பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கணனியில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கணனியில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது. இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கணனிகளைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. கணனியில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது. அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது. தான் தங்கிய கணனியில் உள்ள EXE, dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இதன் மூலம், கணனி இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன.

இதனால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. இவற்றைத் தடுக்க CERTIn குழு, கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது. நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில்களில் உள்ள இணைப்புகளை டவுண்லோட் செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது. நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது. டெஸ்க்டாப் கணனிகளில் பயர்வால் அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, அறிமுகம் இல்லாத போர்ட்களை செயல் இழக்கச் செய்திட வேண்டும். திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும். எனவே, எந்த காரணத்திற்காகவும் இணையத்திலிருந்து திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.

பேஸ்புக்கின் பெருந்தன்மை இந்திய மாணவிக்கு ரூ.2 கோடி சம்பளத்துக்கு வேலை

மும்பையை சேர்ந்த ஐஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் 4ம் ஆண்டு படிக்கும் ஆஸ்தா அகர்வால் என்ற மாணவியை பேஸ்புக் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தில் வேலை அளிப்பதாக தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து மாணவி ஆஸ்தா அகர்வால் கூறுகையில், ‘‘பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ள இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

பயிற்சியின்போது எனது பணியை பாராட்டும் விதத்தில் இந்த நிறுவனம் வேலை வழங்கியுள்ளது. 8வது செமஸ்டரை முடித்த பிறகு, அடுத்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் வேலைக்கு சேர உள்ளேன்’’ என்றார்.

பெட்ரோலுக்கு பதிலாக காற்றை நிரப்பும் பங்க்! வீடியோவால் அம்பலம்

பெட்ரோல் பங்குகளில் விதவிதமான மோசடிகள் அரங்கேறுவது சகஜமாகிவிட்டது. ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பதை போல பெட்ரோல் பங்கிலுள்ள மீட்டரிலும் சூடு வைத்த விவகாரம் வீடியோவாக பரவி வருகிறது.

பஞ்சாப்பிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் வழக்கமாக பெட்ரோல் போடவரும் ஒரு வாடிக்கையாளருக்கு, அந்த பெட்ரோல் பங்க் அளிக்கும் பெட்ரோலின் அளவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 மற்ற பங்குகளில் பெட்ரோல் போடுவதற்கும், இங்கு போடுவதற்கும் இடையே அதிக வித்தியாசம் இருப்பதாக உணர்ந்தார். 4 லிட்டர் பெட்ரோல் போட்டால், 3 லிட்டர் அளவுக்குதான் மைலேஜ் வருவதை கவனித்துள்ளார்.

இதையடுத்து போலீசாரின் உதவியுடன் அந்த பெட்ரோல் பங்கில் சோதனை நடத்தியபோது, ஒரு ரகசியம் அம்பலமானது. அதாவது, குழாயில் பெட்ரோல் வெளியே வராவிட்டாலும்கூட மீட்டர் மட்டுமே ஓடக்கூடிய நவீன டெக்னாலஜியை அந்த பங்க் நிர்வாகிகள் கையாண்டுள்ளது அப்போதுதான் தெரியவந்தது.

தேவர்மகன் திரைப்படத்தில் வரும் பாடலை போல "வெறும் காத்துதாங்க வருது" என்று வாடிக்கையாளர்களும் பாட வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது அந்த பெட்ரோல் பங்க். இந்த வீடியோவை பார்த்தால் மோசடியை புரிந்துகொள்ள முடியும்.

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விபரீத விளைவுகள் – அதிரவைக்கும் உண்மைகள்

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விபரீத விளைவுகள் – அதிர வைக்கும் உண்மைகள்

‘‘7, 8 ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு வைத்திருக் காதவர்களே இல்லை. இன் றைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. காரணம், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவை இல்லாமல்

அதிக செலவு செய்து கையைக் கடித்துக்கொண்டது தான். இந்தக் கசப்பான அனுப வத்துக்குப்பின் பலரும் கிரெடிட் கார்டை தூக்கி எறிந்து விட்டனர். ஆனால், இப்படி செய்வது கூட வே கூடாது. அதை முறைப்படி கேன்சல் செய்ய வேண்டும். அப் படி செய்யவில்லை எனில் எதிர் காலத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும்’’ என்கிறார்கள் அனுபவ சாலி கள்.

கிரெடிட் கார்டினை முறையாக கே ன்சல் செய்யாமல் விட்டால் ஏற்படு ம் விளைவுகள் குறித்து திஷா நிதி ஆலோசனை மைய த்தின் முதன்மை ஆலோசகர் எஸ். கோபால கிருஷ்ண னிடம் பேசினோம். அவ ர் கொடுத்த விரிவான விளக்கம் இங்கே…

“நான் கிரெடிட் கார்டு ப யன்படுத்துவதை நிறு த்தி பல மாதங்கள் ஆ கிறது. ஆனால், வங்கி யில் இருந்து பணம் செலுத்தச் சொல்லி தபால் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது என்று பலபேர் எங்களது ஆலோசனை மையத்தை அணுகி சொல்கிறார்கள். இவர்கள் இப்படி ஒரு பிரச்னையைச் சந்திக்கக்  கா ரணம், கிரெடிட் கார்டுகளை முறை யாக கேன்சல் செய்யாமல் விட்டதுதான்.

 கேன்சல் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்!

ஒருநாள் கணேசன் என்ப வர் எங்கள் மையத்தை தேடி வந்தார். இவர் வேலை செய்த நிறுவனம், வே லை விஷயமாக இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறது. ஓராண்டு அங்கேயே தங்கி பணிபுரிய வே ண்டும் என்பதால், இங்கே பயன்படுத்திவந்த தனியார் வ ங்கியின் கிரெடிட் கார்டு ஒன் றை அலட்சியமாகத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட் டுவிட்டுப்போய்விட்டார். அவ ர் தூக்கியெறிந்த கிரெடிட் கார்டை யாரோ ஒருவர் பய ன் படுத்த  ஆரம்பித்திருக்கி றார்.  கணேசன்  அமெரிக்கா வில் இருந்ததால், இந்த விஷயம் அவருக்கு தெரியவே இல்லை.

ஓராண்டு கழித்து நாடு திரும்பியபோது தான் அவர் கார்டினை யாரோ ப யன்படுத்தியதும், அதற்கு அவர் அசலும் வட்டியுமாக பல ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில்தான் மிகுந்த மன உளைச் சலுடன் எங்களைச் சந்தித்தார் அவர்.

கிரெடிட் கார்டை  முறையாக கேன்சல் செய்யாமல் விட்ட தால் ஏற்பட்ட வினை இது என்று அவருக்குப்  புரியவைத் தோம். அந்தக் கடனை சுமூக மாக அடைக்க வங்கியோடு பேசவும், அந்த கார்டினை முறைப்படி கேன்சல் செய்ய வும் நாங்கள் அவருக்கு உதவினோம்.

நட்பால் வந்த நஷ்டம்!

ஸ்ரீதரன் என்பவர் தான் பய ன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை கேன்சல் செய்யாம ல்,  தனது நண்பரிடம் தந்தி ருக்கிறார். அதை அவர் தன து வண்டியின் சாவிக்குக் கீ-செயினாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். ஒருசமயம்  வ ண்டியின் சாவியுடன், கிரெடிட் கார்டு தொலைந்து போக வண் டிக்கு புதிய சாவியை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கி றார். தரனும் தன் நண்பருக்குத் தந்த கிரெடிட் கார்டினை சுத்தமாக மறந்து விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு தனது கிரெடிட் கார்டை யாரோ பயன்படுத்தி இருப்பதும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகை க்கு ஷாப்பிங் செய்திருப்பதும் ஸ்ரீதரனின் மொபைலுக்கு குறுஞ் செய்தியாக வந்தது. அதன்பிறகே தன் தவறை உணர்ந்தவர் நண் பருடன் வங்கிக்குச் சென்று நடந் ததை விசாரித்துத் தெரிந்து கொ ண்டிருக்கிறார். வேறு வழியில்லாததால், வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தி, அதை கே ன்சல் செய்துவிட்டு, வீட்டு க்குத் திரும்பியிருக்கிறார்.

எப்படி கேன்சல் செய்வது?

கிரெடிட் கார்டினை இனி பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் அஜாக்கிரதையாக அதை விட் டுவைக்காமல், கேன்சல் செ ய்துவிடுவதே நல்லது. இத ற்கு, கிரெடிட் கார்டு வழங் கிய வங்கியை அணுகி தனது முடிவை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதனு டன் தான் அதுவரை பயன்படு த்தி வந்த கிரெடிட் கார்டை இரண்டு துண்டாக உடைத் து அவர்களிடமே கொடுத்துவிட்டு, அதற்குண்டான உறுதிக் கடிதத்தை  வாங்கிக்கொள்ள வேண்டும்.

அல்லது கிரெடிட் கார்டு ரத்து செய்யும் விவரத்தை கடிதம் மூலமாகவோ  போன்மூலமா கவோ தெரிவித்து விட்டு, துண் டிக்கப்பட்ட கிரெடிட் கார்டை கூரியர்மூலம் வங்கிக்கு அணு ப்பலாம். எனினும், இப்ப டி செய்வதைவிட வங்கிக்கு நேரடியாகச் சென்று கிரெடி ட் கார்டினை கேன்சல் செய் வதே சிறந்தது’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.

கிரெடிட் கார்டு வேண்டாம் என்கிறவர்கள் முறையாக அதை கேன்சல் செய்துவிடுவதே நல்லது!

விலங்கியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கியவர் காயத்துடன் மீட்பு!(வீடியோ)


பார்சிலோனா விலங்கியல் பூங்காவில் பார்வையாளர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது,  சிங்கங்கள் நடமாடும் பகுதிக்குள்  45வயது மதிக்கதக்க‌ ஒருவரை சிங்கங்கள் நகங்களால் பிராண்டியும் கடித்தும் காயப்படுத்தியதை அங்கிருப்பவர்கள் கண்டனர். உடனடியாக‌ மீட்பு பணியாளர்கள் தண்ணீரை பாய்ச்சி அவரை காப்பற்றினர். பின்னர் அவர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



அவரை கடித்து கொல்லும் எண்ணத்தில் சிங்கங்கங்கள் அணுகவில்லை என்றும், விளையாடும் நோக்கத்தோடு பிராண்டியுள்ளது என விலங்கியல் பூங்காவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். எல் பயஸ் என்ற அவர் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த தாழ்வான‌ பகுதிக்கு ஏன் சென்றார் குதித்தாரா அல்லது தவறி விழுந்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது! – அதிர வைக்கும் ஆன்மீகத் தகவல்

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  – அதிர்ச்சித் தகவல்

திருப்பதி கோவிலில் இருப்ப‍து பெருமாள் கிடையாது,  அங்கிருப்ப‍து

முருகக் கடவுகளே! என்பதற்கான ஆதாரங்கள் – அதிர்ச்சித் தகவல்

திருப்பதிக்குப் போய் மொட்டைபோட்டுவிட்டு வருகி றாராம், அடங்கப்பா, எந்த பெருமாள் கோவிலிலாவது மொட்டைபோடும் வழ க்கம் உண்டா?

*எந்த பெருமாள் வெறும் இரண்டு கைகளோடு இருக் கிறார்?

*எந்த பெருமாளுக்கு உலகை ஆண்ட அரசன், நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவ (சிவன்) பெயர் உள்ளது?

*எந்தப் பெருமாள் கோவில் கொடிமரமும் தெப்பக் குள மும் இல்லாமல் இருக்கிறது?

*எந்த ஆழ்வாராவது திருப்பதி பெருமாளைப் பாடியது உண்டா?

*எந்த பெருமாள் சிலையாவது இடது கையை கீழே தொங்கப் போட்டபடி உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியவாறு உள்ளதா? (படத்தில் பார்க்க)
*கோவிலைச்சுற்றி கிடைத்துள்ள கல்வெட்டுகள் அனைத்துமே தமிழ்க்கல்வெட்டுகள் என்பதை அறிவீரோ ?

*கோவில் சுவர் முழுக்க தமிழ் எழுத்துகள் சுண்ணாம் படித்து மறைக்கப்பட்டிருப்பதை கவனித்துள்ளீரா?

*சங்கும் சக்கரமும் தோளில் ஒட்ட வைத்திருப்பதை யும் அதன் பின்னால் போலியான பின்கைகள் ஒட்ட வைக்கப்பட்டிருப்பதையும் கூர்ந்து நோக்கியிருக்கிறீ ரா?

*பெருமாள் கோவில்கள் பெரும்பாலும் மலைமீது இரு க்காதே?
*தங்கத்தாலும் வைரத்தாலும் அடக்கம் செய்யப்பட்டு ள்ள சிலை, முருகர் சிலை என்றால் நம்புவீரா?

சங்கநூல்கள் வேங்கடத்தைப் பாடுகின்றன; (ஆனால் முருகன் என்று பாடவில்லை); இளங்கோவடிகள் சில ப்பதிகாரத்தில் ‘வேங்கடத்து நெடியோனைப்’ பாடுகி றார்.
அருணகிரிநாதர் முருகன் என்று அடையாளம் கண்டு ‘வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மாமலை யில் உறைவோனே!’ என்று பாடுகிறார்.
சைவர்களும்வைணவர்களும் திருப்பதியைச்சொந்த ம் கொண்டாட 12ம் நூற்றாண்டில் ராமானுசர் கருவ றையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரச முத்தி ரையோடு பூட்டு போட்டாராம்; மறுநாள் காலை திறந் து பார்த்தால் சங்கும் சக்கரமும் சிலைமேல் இருந்த தாம்; சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட னர்; உடனே சங்கு சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவத்தலமாக்கிவிட்டார்களாம்.


ஆம்சுடர்டாமில் இருந்து ரோசா மலர்கள், சுபெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கசுதூரி, சீனா வில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் என வளம் கொழிக்கும் திருப்பதி 2013ம் ஆண்டில் மட்டும் 860 கோடி வருமானம் ஈட்டியுள்ளது; இந்த ஆண்டு 1000கோடி எதிர்பார்க்கப்படுகிறது;

பற்களுக்கும் பணத்திற்கும் இடையே உள்ள‍ ஆச்சரியமான தொடர்பு – வியக்க‍ வைக்கும் தகவல்



பற்களுக்கும் பணத்திற்கும் இடையே உள்ள‍
 ஆச்சரியமான தொடர்பு – வியக்க‍ வைக்கும் தகவல்
என்ன தலைப்பே வித்தியாச மாக உள்ளதா….

இதனைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல் வீர்கள்?

பணக்காரர்கள் என்றால் மருத்துவ முறையில் புதிய பற்களை வைத் துக்கொள்ள முடியும், ஏழைகளால் அது முடியாது. இதைத்தவிர பண த்திற்கும், பற்களுக்கும் என்ன சம் பந்தமும் கிடையாது என பெரும் பாலானோர் கூறுவதுண்டு. ஆனா ல் சம்பந்தம் உள்ளது என தற்போ தைய ஆய்வு முடிவு ஒன்று கூறுகி றது. இது லண்டனில் பெரியவர்க ளுக்கான பற்களைப் பற்றிய ஆய் வினை அடிப்படையாகக் கொண்ட முடிவுகள்.

இதில் லண்டனைச் சேர்ந்த 21 வயதிற்கு மேற்பட்ட, சுமார் 6000 மக்களை ஆய்வுக் குட்படுத்தினர். இந்த 6000 பேரில் பணக்காரர்கள், ஏழைகள் என அனைத்து வருவாய் நிலையில் இரு ப்பவர்களும் சேர்ந்திருந் தனர். இந்த ஆய்வின் முடிவில், மனிதனின் எழுவதாவ து வயதுகாலத்தில் பணக்காரர்களுக்கு இருக்கும் பற்க ளைவிட ஏழைகளுக்குக் கிட்டத்தட்ட 8 பற்கள் குறை வாக இருப்பதாகத் தெரிவிக் கப்பட்டது. மனிதனுக்கு சாதாரணமாக 32 பற்கள் உண்டு, அதிலும் 8 பற்கள் இல்லையென்பது நான்கில் ஒரு பங்கு போன்றது. இத்தனை பெரிய வித்தியாசம் நம் வாழ்க்கை முறையினை அடிப்படையாகக் கொண்டிரு ப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

இத்தனை விஷயங்களும், உடல்நலம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட நிறுவனங்க ளான நியூகேஸ்டில் பல் கலைக்கழகம் மற்றும் சமூக ஆய்வுகளுக்கான சர்வதேச மையம் போன்றவை இணைந்து நடத்திய ஆய்வில்தான் வெளிவந்துள்ளன. மேலும் ஏழைகளின் உடல் நிலையினை பணக்காரர்களி ன் உடல்நிலையுடன் ஒப்பிடு ம்போது ஏறக்குறைய 20%  மோசமாக உள்ளதாக கண்ட றியப்பட்டது.

65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த பொரு ளாதார வித்தியாசங்கள் மிகவும் அதிகளவில் இருக்கி றது. இது பற்றி பேராசிரி யர் ஜிம்மி ஸ்டீல் கூறுகை யில், “பணக்காரர்களின் உடல்நிலைக்கும், ஏழைக ளின் உடல்நிலைக்கும் வித்தியாசங்கள் இருப்பது ஆச்சரியமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்த வித்தியாசங்களின் அளவு மிகப்பெரியதாக இருப்பது கண்டிப்பாக வியப்பினை ஏற் படுத்தும்”.
என்னதான் நாம் நமது உடல் நிலையினை பேணிப் பாதுகாத்தாலும் நம்மைச் சுற் றியிருக்கும் சூழ்நிலைகளும் நம் உடல் நிலையில் பாதிப்பினை ஏற்படு த்தும் என்பதற்கு இந்த ஆய்வு முடிவுகளேச் சான்று.

Blog Archive