Saturday, December 6, 2014

கோழியை தொட்டாலே மரணம் ஏற்படும்: எச்சரிக்கை

 தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை முன்னாள்  இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:

பறவை காய்ச்சல் வைரஸ்  நோய் தாக்கிய கோழி இறைச்சியை சாப்பிடுகிறவர்களுக்கும் பறவை  காய்ச்சல் வைரஸ் தாக்க வாய்ப்புள்ளது. பறவை காய்ச்சல் வைரஸ்  தாக்கிய கோழியை சமைப்பதற்கு முன், அந்த கோழியை நாம் கையால்  தொடுகிறோம், அதை தண்ணீரில் சுத்தம் செய்கிறோம். நோய்  பாதிக்கப்பட்ட கோழியை தொட்டால் கூட கிருமி தாக்கவும், 100 % நோய்  பரவும் ஆபத்தும் உள்ளது.


பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களை தாக்கினால், வயிற்றுப்போக்கு  ஏற்படும். அதையடுத்து, சுவாச தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு மூச்சு  திணறல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் ஆபத்துள்ளது. கோழியின்  முட்டை ஓட்டில் கூட பறவை காய்ச்சல் வைரஸ் இருக்கும். அதை நாம்  தொடும்போது நமக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படும். ஆனால், முட்டைக்கு  உள்ளே இருப்பதை சாப்பிட்டால் நோய் பாதிப்பு இருக்காது. ஒருவருக்கு  வைரஸ் தாக்கினால் அவர், 15 நாள் மட்டுமே உயிரோடு இருப்பார்.


பண்ணை கோழிகள் மூலம், வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கும் பரவ  வாய்ப்புள்ளது. கோழிகள் எதுவும் சாப்பிடாமல், மூக்கு பகுதியில் ஒருவித  மாற்றம், சத்தம் போட்டுக் கொண்டே இருப்பது, திடீரென சுருண்டு விழுந்து  இறப்பது போன்ற அறிகுறி இருந்தால்,

பறவை காய்ச்சல் வைரஸ்  இருப்பதாக அர்த்தம். கேரள மாநில எல்லை பகுதியில் உள்ள கோவை,  நீலகிரி எல்லையில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.  கோழி கழிவுகளில் இருந்தும், காற்று மூலமும் இந்நோய் பரவ அதிக  வாய்ப்புள்ளதால், கேரள பகுதிகளில் இருந்து கோழி கழிவுகளை தமிழகம்  பகுதியில் வந்து கொட்டாமல் இருக்க அப்பகுதி மக்கள் தீவிர  கண்காணிப்பில் இருக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

ஜெயலலிதாவின் 12 பினாமி நிறுவனங்கள்: புதிய வழக்குத் தொடரப் போவதாக சுவாமி பரபரப்பு அறிவிப்பு!

 அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப் போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறுகிறார். 12 பினாமி நிறுவனங்களை ஜெயலலிதா வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலலிதா சாமி மோதல் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. இதில் இதுவரை ஜெயலலிதா பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை.மிக முக்கியமாக சாமி பிள்ளையார் சுழி போட்டு வைத்த சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் விட்டார் ஜெயலலிதா.

ஜாமீனில் வெளிவருவதற்குள் பெரும்பாடு பட வேண்டியதாயிற்று. ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு. ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறுகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன்.

தமிழக அரசுடன் வர்த்தக் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார். இது என்ன மாதிரியான கஷ்டத்தை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

எவனோ உள்ளே புகுந்துட்டான்! விஜய்யை இயக்கலை - கே.வி.ஆனந்த்

 விஜய்யின் 60 -வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார் என்று காட்டுத்தீயாக செய்தி பரவிய நிலையில் இல்லை என்று மறுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.

அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் விஜய்யின் 60 -வது படத்தை அவர் இயக்குவது உறுதி செய்யப்பட்டிருந்தது. பிறகு அது திடீரென்று மாற்றப்பட்டது. அது பொய்யான செய்தி, எவனோ என்னுடைய புரபைலில் புகுந்து அப்படியொரு செய்தியை போட்டிருக்கிறான். விஜய்யுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது என்று கூறியிருந்தார். அவரது இந்த போஸ்டும் திடீரென நீக்கப்பட்டது.

என்னதான் நடக்கிறது?

கே.வி.ஆனந்த் சொன்னது போல் முதலில் இருந்தது எவனோ உள்ளே புகுந்து போட்ட போஸ்டாம். அதை மறுத்து ஆனந்த் போட்ட போஸ்டை அவரேதான் மாற்றினாராம். விஜய் - அஜீத் ரசிகர்கள் தன்னுடைய போஸ்டை முன்வைத்து அடித்துக் கொள்வார்கள் என்று அதனை மாற்றினாராம். எல்லாம் சரி, விஜய்யை இயக்குகிறாரா இல்லையா?

விஜய்க்கான ஸ்கிரிப்ட் தயாரானால் நானே நேரடியாக விஜய்யிடம் கால்ஷீட் கேட்பேன் என்கிறார். அப்போ கதை சொன்னதாக சொல்லப்பட்டதெல்லாம் பொய்யா?


ஆண்டவனுக்கும் ஆனந்துக்குமே வெளிச்சம்.

குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி!

 குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது எப்படி

குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.

சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி? டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.

டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது. சிலவகை டயப்பர்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

அதை கட்டியிருக்கும் சருமப் பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த வேண்டாம்.டயப்பர் இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும்.

கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால் அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.சருமத்தில் சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு’ கொண்ட ஆயில்மென்ட் பயன்படுத்தலாம்.

நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள். வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!


கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!


கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ...‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!



இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு  உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

ஆண்மைக்கு ரோஜா குல்கந்து


 காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

தாது விருத்தி தரும் பூசணிக்காய்


 பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

இனிமையான உறவுக்கு இலுப்பை பூ


 இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்

 சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறதா?

Hair growth on the face is more. Pli done in vain. Is there a way to fix this problem in a natural way?

முகத்தில் ரோம வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. ப்ளீச் செய்தும் பலனில்லை. இயற்கையான முறையில் இந்தப் பிரச்னையை சரி செய்ய வழி  இருக்கிறதா?

வழிகாட்டுகிறார் அழகுக்கலை ஆலோசகர் ராஜம் முரளி...


டீன் ஏஜ் பிள்ளைகள் அதிகம் சந்திக்கும் பிரச்னை இது. ஹார்மோன் குறைபாடு காரணமாக சிலருக்கு ரோம வளர்ச்சி அதிகம் இருக்கும். உடனடியாக  டாக்டரிடம் கன்சல்ட் செய்து கொள்ளுங்கள். ப்ளீச் செய்வதால் முகத்தில் உள்ள ரோமத்தின் நிறம் மாறுமே தவிர, நிரந்தரத் தீர்வு கிடைக்காது. எந்தக்  காரணத்துக்காகவும் ரிமூவர் கொண்டு ரோமம் நீக்க முயற்சி செய்ய வேண்டாம்.

பல மடங்கு அடர்த்தியுடன் முடி வளர்ந்து முகத்தை அசிங்கமாக்கிவிடும். ரோமத்தை எளிதாக நீக்க இயற்கையான வழிமுறை இருக்கிறது.  குப்பைமேனி இலை, வசம்பு, வேப்பந்தளிர், விரலி மஞ்சள், கோரைக்கிழங்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, உலர வைத்து பொடியாக்கிக்  கொள்ளுங்கள்.

இந்தக் கலவையில் 2 டீஸ்பூன் எடுத்து திக் பேஸ்ட்டாக ஆக்கிக் கொள்ளுங்கள். முகத்தில் தடவுங்கள். கொஞ்சம் உலர்ந்த உடன் ப்யூமிஸ் ஸ்டோன்  வைத்து மேல் நோக்கி ஸ்க்ரப் செய்வது போல செய்யுங்கள். வாரம் ஒருநாள் செய்து வந்தால் ரோமங்கள் நீங்கி, முகம் பளிச் ஆகிவிடும்!