Saturday, December 13, 2014

ஜெயலலிதாவை மீண்டும் சிறையில் அடைப்பேன்: சபதமிடும் தலைவர்

போஸ்டர்களின் மூலம் ஆர்ப்பாட்டம் நடத்தி ஜெலலிதாவை மீண்டும் சிறையில் அடைக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியவதாவது, தமிழக அரசு பெயரளவுக்கு சட்டமன்றத்தை நடத்துகிறது. நாடாளுமன்றத்துக்கு மோடி வருவதில்லை, அப்படியே வந்தாலும் எந்த பிரச்னைக்கும் பதில் சொல்வதில்லை.

இதற்கிடையே மக்களின் முதல்வர் என கூறிக்கொண்டு, வீட்டில் முடங்கி கிடக்கும் ஜெயலலிதா பன்னீர் செல்வத்தின் மூலம் ஆட்சி நடத்துகிறார்.

அவரது ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க கோரி, போயஸ் கார்டன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் இவ்விடயத்தில் பொலிசார் எங்களை தடுக்க முயன்றால் அவர்களையும் மீறி நாங்கள் செயல்பட தயார் எனவும் பேட்டியளித்துள்ளார்.

0 comments:

Post a Comment