Friday, December 5, 2014

பறக்கும் தட்டு வந்ததா?

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசிக்கும் ஸ்டீபானி வில்கெர்சன் என்ற பெண்மணிக்கு அண்மையில், ஒரு வினோத அனுபவம் கிடைத்தது. அவர், தனது வீட்டில் இருந்தபோது நள்ளிரவில் தற்செயலாக வானத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்களுக்கு சற்று தொலைவில் பல வண்ணங்களுடன் கூடிய ஒளிவட்டம் ஒன்று தெரிந்தது.

உடனே இது பற்றி பக்கத்து வீட்டில் இருந்த வாலிபருக்கு தெரிவித்து அவரிடமிருந்த தொலைநோக்கியை வாங்கி வந்தார். அந்த வண்ண ஒளி வட்டத்தை இருவரும் பெரிதாக்கி பார்த்தனர். பின்னர் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்துக் கொண்டே அவசர உதவி மையத்துக்கு தகவலும் தெரிவித்தனர்.

இதுபற்றி ஸ்டெபானி கூறுகையில், இந்த ஒளிவட்டம் விமானம் சென்றதால் ஏற்பட்டதோ என்று நினைத்தேன். ஆனால் அந்த ஒளிவட்டம் 20 நிமிடங்கள் அங்கேயே இருந்தது. மேலும் அந்த வண்ண நிறங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது என்றார்.

பென்சில்வேனியா விமான நிலைய அதிகாரிகள், அந்த குறிப்பிட்ட நேரத்தில் விமான இயக்கம் எதுவும் அப்பகுதியில் நடக்கவில்லை என்றனர்.

அந்த ஒளிவட்டம் வேற்று கிரகத்தின் பறக்கும் தட்டா என்ற மர்மத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

0 comments:

Post a Comment

Blog Archive