Friday, December 5, 2014

என்ன கொடுமை சரவணா !!இங்கு இவரை உண்ணலாம் உயுருடன் வேண்டாமாம்!!!

பயணிகள் விமானத்தில் தனது செல்லப்பிராணியான பன்றியொன்றையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற பெண்ணொருவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கனக்டிகட் மாநிலத்தின் பிராட்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யூ.எஸ். எயார்வேஸ் நிறுவனத்தின் விமானமொன்றில் பெண்ணொருவர் பன்றியொன்றுடன் ஏறினார்.

சக பயணிகள் பலர் அதை ஒரு பை என்றே முதலில் எண்ணினராம். ஆனால், அதிக துர்நாற்றம் எழுந்ததால் அது பன்றி என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்துகொண்டனர்.

அப்பன்றி பின்னர் விமானத்துக்குள் ஓடித்திரிந்ததாகவும் அதன் உரிமையாளரான பெண் விமானத்தில் அழுக்கேற்பட்ட இடங்களை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பயணிகள் பலர் இப்பன்றியை விமானத்தில் கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்பன்றியுடன் அதன் உரிமையாளரான அப்பெண்ணும் விமானத்திலிருந்து அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.
மேற்படி பன்றி சுமார் 35 கிலோ எடையுடையதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Blog Archive