Monday, December 1, 2014

சர்க்கரை நோய் உண்டாக காரணம் என்ன?

இந்தியாவில் 50 மில்லியன் மக்களுக்கும் மேலானோர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகத்திலயே இந்தியாவில் தான் அதிக சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இதனால் இந்தியாவை உலகத்தின் 'சர்க்கரை நோய் தலைமையகம்' என்று அழைக்கின்றனர்.
இந்த நோய் வருவதற்கு காரணங்கள் கீழ்கண்டவாறு இருக்கலாம்.

* பரம்பரை:

நம் பெற்றோர்களிடமிருந்து நமக்கு மரபணுக்கள் கொடுக்கப்படுகின்றது. இந்த மரபணுக்களில் HLA(Human leukocyte antigens) என்ற புரத சத்தை தயாரிக்க அறிவுறுத்தல்கள் இருந்தால் சர்க்கரை நோய் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

* உடல் உழைப்பு இல்லாத வாழ்கை:
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடல் எடை கூடும் வாய்புகள் அதிகம் உள்ளது. உடல் எடை கூடினால் சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகரிக்கின்றது.

* முறையற்ற உணவு பழக்கம்:
இன்றைய காலத்தின் கட்டாயத்தால் அதிகமாக கொழுப்பு கலந்திருக்கும் துரித உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.  அதிக மாவு பொருட்கள், இனிப்பு, கார பொருட்கள் நிறைந்த உணவுகளை உண்பதால் சர்கரை நோய் வர வாய்புகள் உள்ளது.

* மது, புகை, போதை பொருட்கள்:
மது அதிகம் அருந்துவதால்,கணையத்தில் அழற்சி ஏற்ப்பட்டு அது இன்சுலின் சுரக்கும் தன்மையை குறைக்கின்றது.
புகை பிடிப்பதால் இரத்தத்தில் இன்சுலின் எதிர்ப்பு உண்டாகிறது. இதனால் இன்சுலின் இரத்தத்தில் சேர்வதில்லை.

சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
*அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
*நெய், பால், மீன் அதிகளவில் உண்பது
* வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பது

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

0 comments:

Post a Comment

Blog Archive