Monday, December 1, 2014

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்

சர்க்கரை நோயை 3 விதமாக கட்டுப்படுத்தலாம்

1) உணவுக்கட்டுப்பாடு:
* உணவில் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகளை குறைத்திட வேண்டும்.
  உதாரணம் கேரெட்,பீட்ரூட்,உருளை கிழங்கு,வாழைப்பழம்,மாம்பழம்,இனிப்பு     பண்டங்கள்,அரிசியினால் செய்யும் உணவு வகைகளான சாதம்,இட்லி,தோசை,
இடியாப்பம் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது.
* இரவில் கோதுமை, ராகி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
* கொய்யா,நாவல் பழம்,பேரிக்காய்,வெள்ளரி,நெல்லிக்காய் ஆகியவை சாப்பிடலாம்.
* ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்த்து 4 அல்லது 5 முறை ஒரு நாளில் குறைவான அளவில் உண்பது நல்லது.

2) மருத்துவ முறைகள்:

* ஆவாரை,கொன்றைவேர்,நாவல் கொட்டை,கடலழிஞ்சில்,கோரை கிழங்கு,கோஷ்டம்,மருதம்ப்பட்டை ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து 4 டம்ளர் நீர் சேர்த்து 1 டம்ளர் ஆக வற்றும் வரை காய்ச்சி, தினமும் இரு வேலை குடிக்க,நீரிழிவு நோய் குறையும்
*தேற்றான் விதை,கடுக்கை தோல்,ஆவாரை விதை,விளாம் பிசின் ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து முதல் நாள் இரவு மோரில் ஊற போட்டு, மறு நாள் காலை அறைத்து பசு மோரில் கலந்து சாப்பிடலாம்.
* நெல்லிக்காய் சாறு,தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை தலா 15 மி.லி எடுத்து மூன்றையும் கலந்து காலை மற்றும் சாப்பிட்டு வர இந்நோய் குறையும்.
* அருகம்புல்லை நிழலில் உலர்த்தி காலையும் மாலையும் வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.
* இலவமரப்பட்டை-10 கிராம்,கருஞ்சீரகம்-5 கிராம் எடுத்து பொடியாகி,1 ஸ்பூன் மோரில், உணவுக்கு முன் மூன்று வேளை சாப்பிடலாம்.

3) உடற்பயிற்சி:
* தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடை பயிற்சி செய்து வரவும்.
* இளம் வயதினராயின் ஓட்டப் பயிற்சி, யோகா செய்து வரலாம்.
* பகலுரக்கதை தவிர்க்க வேண்டும்.

தடுப்பு முறைகள்:
* நெல்லிக்காய் சாறு ஒரு மேஜை கரண்டி,பாகற்காய் சாறு 1 மேஜை கரண்டி கலந்து தினமும் காலையில் சாப்பிட, கணையம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, சர்க்கரை வியாதியை தடுக்கலாம்.
* நெல்லிக்காய் பொடி, நாவல் பழப்பொடி,பாகற்காய் தூள் தலா ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.
* தினமும் நடை பயிற்சி , ஓட்ட பயிற்சி செய்தல்.

0 comments:

Post a Comment

Blog Archive