Friday, December 12, 2014

மேயர் துரைசாமி மகனிடம் இருந்து மனைவி, மகளை மீட்டு தரக்கோரி கணவன் வழக்கு

மேயர் சைதை துரைசாமியின் மகனிடம் இருந்து மனைவி, குழந்தையை மீட்டு தரும்படி உயர் நீதிமன்றத்தில் கணவன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  நேரில் ஆஜரான அவரது மனைவி, என்னை யாரும் கடத்தவில்லை என்று மறுத்துள்ளார்.


சென்னை ஐகோர்ட்டில், கோடம்பாக்கத்தை சேர்ந்த ராகேஷ் (35) என்பவர்  தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மருத்துவ உபகரண பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

எனக்கு சவுமியா (வயது 28) என்ற  மனைவியும், நைஷா என்ற 5 வயது மகளும் உள்ளனர். என் மனைவி, நாய்களுக்கு உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்துகிறார். இதனால், நாய்  கண்காட்சி நடத்தும் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.


அதன்படி, அந்த அமைப்பின் நிர்வாகியும், சென்னை மேயர் சைதை துரைசாமியின்  மகனுமான வெற்றி துரைசாமியுடன் என் மனைவிக்கு நட்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக இருவரும் பழகினார்கள். பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல், என்  மனைவியுடன் அவர் நெருக்கமாக பழகத் தொடங்கினார்.

இதனால் கோடம்பாக்கத்தில் சொந்த வீடு இருந்தும், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள வாடகை வீட்டுக்கு மாறினார். நான் எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கேட்கவில்லை.  வெற்றி துரைசாமியுடன் உள்ள பழக்கத்தை கைவிடவும் அவர் மறுத்து விட்டார்.

இந்நிலையில், 5 வயது என் மகளை வெற்றி துரைசாமி என்னிடம் அழைத்து வந்து,  தன்னோடு இருக்கும்போதுதான் குழந்தை சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி சென்றார்.

என்னுடைய அமைதியான, சந்தோஷமான இல்லற வாழ்க்கையை  வெற்றிதுரைசாமி சீரழித்து வருகிறார். தற்போது, என் மனைவி, மகள் ஆகியோரை சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, என் மனைவி, மகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, என்னிடம் ஒப்படைக்க போலீஸ் கமிஷன ருக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், டி.மதிவாணன் ஆகியோர் நேற்று விசாரித்து, மனுதாரரின் மனைவி, மகளை வருகிற 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த  வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், சவுமியா தனது மகளுடன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார். அதே நீதிபதிகள் முன்பு  அவரது வக்கீல் ஆஜராகி சவுமியாவை யாரும் கடத்தவில்லை நேரில் ஆஜராக வந்துள்ளார் என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கிறோம்.  அப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்று சவுமியா வக்கீல் செந்தில் கூறினார்.


நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சவுமியா பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, என்னை யாரும் கடத்தவில்லை, நான் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபற்றி நீதிபதிகளிடம் நேரில் தெரிவிப்பேன் என்றார்.

0 comments:

Post a Comment