Friday, December 12, 2014

இந்துவாக மதம் மாறினால் ரூ.5 லட்சம் அன்பளிப்பு அறிவிப்பு

'தரம் ஜக்ரன் சமிதி' என்ற இந்து அமைப்பு, இந்துவாக மதம் மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், இந்துவாக மதம் மாறும் முஸ்லிம்க்கு ரூ.5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று சர்ச்சைக்குரிய கடிதம் ஒன்றை உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் வினியோகித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் 'தரம் ஜக்ரன் சமிதி' (Dharam Jagran Samiti) என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் அம் மாநிலத்தின் பல இடங்களில் வினியோகிக்கப் பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், இந்துவாக மதம் மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், இந்துவாக மதம் மாறும் முஸ்லிம்க்கு ரூ.5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்களாக இருந்து பிற மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இருந்து 40,000 பேர் இந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மேற்கு உத்தரபிரதேசம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிய முசாபர் நகரிலும் விநியோகிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment