தற்போது நடைமுறையில் சுகப்பிரசவம் என்பது குறைந்து பெரும்பாலான பெண்களுக்கு அறுவைசிகிச்சை பிரசவம் தான் நடைபெற்று வருகின்றது.பொதுவாக இந்த மாதிரியான பிரசவம், குழந்தை பிறக்கும்பொழுது சிக்கல் ஏற்பட்டால் தான் நடைபெறும். மேலும் சில அனுபவமுள்ள பெண்களும் அறுவைசிகிச்சை பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது எற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே. ஆனால் உண்மையில் அறுவைசிகிச்சை பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும் அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின்னர் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. அறுவைசிகிச்சை பிரசவத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின்னர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலில் அறுவைசிகிச்சைபிரசவம் என்றாலேயே வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பது. அவ்வாறு அறுவைச்சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கும்பொழுது வயிற்றில் ஏற்படும் தழும்பானது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும். அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவயிற்றில் அறுவைசிகிச்சை செய்யும் போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது அறுவைசிகிச்சை வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும். சுகப்பிரவத்தை விட அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களுக்கு குறைந்தது 3 மாத ஓய்வானது அவசியம். வேலை செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பிரச்சனையாகிவிடும். ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியாது. பொதுவாகவே தசையில் ஏதேனும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் குடலிறக்கம் என்னும் ஒருவித புடைப்பானது உண்டாகும். குறிப்பாக அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின்னர் இந்த மாதிரியான குடலிறக்கம் ஏற்படும். அதிலும் அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின்னர் சரியான ஓய்வு எடுக்காவிட்டால் இறுதியில் குடலிறக்கத்திற்கு உள்ளாகக்கூடும். மேலும் ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் அறுவைசிகிச்சை செய்தால், பின் அதிகப்படியான பிதற்றல் ஏற்படும். அறுவைசிகிச்சை செய்த பின்னர் அடிக்கடி கடுமையான முதுகு வலியானது ஏற்படும். அதிலும் அறுவைசிகிச்சையின் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழுத்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும். |
Sunday, November 30, 2014
அறுவைசிகிச்சை பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!
Blog Archive
-
▼
2014
(289)
-
▼
November
(97)
-
▼
Nov 30
(32)
- பற்களில் கரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?
- தமிழன் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!
- சர்க்கரை நோய் | நீரிழிவு| Diabetes | Blood sugar
- Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்கள...
- 50 விதமான மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்!
- ஆஸ்துமாவா? அச்சம் வேண்டாம்!
- முகப்பருவைப் போக்க சில எளிய வழிகள்!!
- சளித்தொல்லைக்கு கருந்துளசி!
- அறுவைசிகிச்சை பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!
- மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற இணையதளங்கள்!
- துாக்க மாத்திரை இல்லாமலே நிம்மதியான தூக்கத்தை தரும...
- காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து!
- வீட்டு வைத்தியமும் மக்கள் நம்பிக்கையும்!
- வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உ...
- இளநரையும் அதைத் தவிர்க்க சில ஈசியான வழிகளும்!
- நீங்கள் சாப்பிடுவது உணவா? விஷமா??
- ஃபேஸ்புக்கைப் (FACEBOOK) பற்றி நீங்கள் அறிந்திராத ...
- ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் க...
- பல் ஏன் துலக்க வேண்டும்? எப்படி துலக்குவது??
- ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும் கீ...
- நூடுல்ஸ் - ஒரு குப்பை உணவு!
- கம்ப்யூட்டர் திரை அறிய வேண்டிய தகவல்
- குறட்டையை விரட்டும் சிகிச்சை!
- சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
- கூல்டிரிங்க்ஸ் அருந்தும் ஆண்களே,எச்சரிக்கை!
- சர்க்கரை நோய்க்கு முந்திய நிலை(Pre-Diabetes)
- மன அழுத்தத்தை குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள்!
- சாக்லெட் சுவைப்போர் கவனத்துக்கு..!
- தடுப்பு மருந்துக்குக் கட்டுப்படாத நோய்கள்!
- வைகோ மீது பாஜகவுக்கு திடீர் ஆத்திரம் ஏன்? பின்னணிய...
- முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்!
- ஆரோக்கியம் தரும் ‘ தண்ணீர் சிகிச்சை’
-
▼
Nov 30
(32)
-
▼
November
(97)
0 comments:
Post a Comment